Total Pageviews

Saturday, 17 August 2019

Abirami Anthathi 51-57





காசு பணம்தான் நமக்கு பாதுகாப்பு ; கோட்டை போல பலதலைமுறைக்கு சொத்து சேர்க்கவேண்டும் என இறைவனின் அருளை அறியாதவர்கள் நம்புகிறார்கள்

பணத்தாசையே மற்ற ஆசைகளையும் தூண்டி உலகில் பலவகையான கேடுகளை உருவாக்கிவிடுகிறது

அளவுக்குஅதிகமான ஆசைகளை தூண்டுபவை அசுர சக்திகளே ஆகும்

இந்த அசுர சக்திகளால் உண்டாகும் முரண்பாடுகளை அழிக்க சிவனும் நாராயணரும் முயற்சித்த போது நாராயணன் மோஹினியாக வியாபகம் செய்து அவரைப்பார்த்து அசுரர்கள் சிந்தை தடுமாறி நின்ற போது சிவன் அவர்களை அடக்கினார் என்பதாக ஒரு புராணம் உண்டு

மோஹினி அவதாரம் என்பது ஒரு குறிப்பு . அதாவது அதிதேவர் நாராயணன் தன்னில் ஒரு பகுதியை பெண்ணாக வியாபகப்படுத்தினார் .அவரே அதிதேவர் நாராயணி . அவரை சிவனுக்கு மனைவியாகவும் நமக்கு அன்னையாகவும் வழங்கினார்

அசுரர்களை கட்டுப்படுத்த மட்டுமல்ல நமக்கு அன்னையாக இருந்து வழிநடத்தவும் ; சிவன் பெரியவரா நாராயணன் பெரியவரா என மதச்சண்டை போடும் மனிதர்களுக்கு சிவன் கோவில்கள் அனைத்திலும் அன்னையாக நாராயணனின் ஒரு அம்சமே இருக்கிறது என சமரசத்தை உணர்த்தவுமே மோஹினி அவதாரமாகும்

இந்த நாயகியை சரணடைந்தால் மற்ற மூன்று அதிதேவர்களும் தானாகவே நமக்கு அருள்புரிவார்கள்

வையம் வரவுக்கு வழிசெய்வது ; துரகம் அது நல்வழியில் அளவோடு செலவாகவேண்டும் . செலவு குறைந்து மிச்சம் உண்டானால் மாமகுடம் வண்டி வாகனம் ஆபரணங்கள் எல்லாமே நீ நாடி தேடி ஓடவேண்டியதில்லை

நல்ல மதியை அருளும் சிவனாரின் திருமனையாலின் அடித்தாமரையை தியானம் தவம் செய்பவருக்கு தானாகவே வந்து சேரும்

அன்னையின் அழகிய உருவம் மீது லயிக்கும்போது அதுவே தவமாகவும் மாறிவிடுகிறது . மலார்ப்பாதங்கள் துவங்கி முழு உருவமும் மனதில் தங்கிவிடுகிறது

நித்தமும் தியானம் செய்துகொண்டிருந்தால் உலகத்தால் நம் மனதில் வந்து குவியும் மாசு மருக்கள் நீர்த்துபோய்க்கொண்டிருக்கும்

தியானத்தை நிருத்திவிட்டாலோ உலகம் நம்மை ஆழுமை செய்து அருள்வளம் நீர்த்துப்போகும்

பக்தன் சொல்கிறான் நித்தம் தியானம் செய்யாதவர்களிடத்து அன்னை வரமாட்டாளாம் . அவளின் பாதத்தை பிடித்துக்கொண்டாலோ இல்லாமை சொல்லி ஒருவரிடம் உதவி கேட்டு போகும் நிலை வரவே வராதாம்

பக்தன் இயல்பிலேயே கவித்திறன் உடையவன் . அவன் கோவிலும் அன்னையும் கதி என இருந்தானே தவிர தன் கவித்திறமையை அரசனிடம் காட்டி பரிசுகள் பெற முயலவில்லை

ஆனால் அப்படி பலர் இருந்தார்கள் . பசுந்தமிழ் பாமாலைகள் அரசனைப்பற்றி கொஞ்சம் மெய்யும் பொய்யும் இயம்பி பலர் காசு பார்த்துக்கொண்டுதான் இருந்தனர்

ஆனால் பக்தன் சொல்கிறான்

சிவனார் அளக்கிறபடி அண்டத்திற்கே படி அளக்கிறவள் நீயல்லவா

வரவு செலவு என்ற இரண்டு நாழிகளையும் நிர்வகித்து அறம் செய்கிறவள் நீயல்லவா

அப்புறம் எதுக்கு இந்த அரசனைப்பார்க்கனும்

ஆயிரம் மின்னல்கள் ஒரு மேனியானதைப்போல இலங்குகின்றாய் சிவனாரின்மனமகிழ்ச்சியாக இருக்கிறாய் வேதங்களின் துவக்கமும் நடுவும் முடிவுமானவள் ஆனந்தவல்லி உன்னை தியானிக்கும் ஆனந்தத்தை விட சாப்பாடு கூட வேண்டியதில்லை

படைப்பு துவங்கும்போது உண்டாகட்டும் என இறைவன் பேசினார்

வெட்டவெளியில் இறைவனின் ஆவி ஒரிடத்தில் குவிந்தது . அதுவே பிரபஞ்சமாக விரிந்தது

அதையே ஆதிசக்தி என்கிறார்கள்

பிரபஞ்சம் உருவாகும் முன்பே ஆதிசக்தி இறைவனிடமிருந்து வந்தாள்

ஒன்று ஆக அரும்பி பலவாக விரிந்து அவைகளையும் நீங்கி தனியாகவும் நிற்பவள் நீ என்கிறான் பக்தன்

இந்த அறிவு தனக்கும் மூத்தவள் என்ற தெளிவு ஆலிலையில் துயின்ற சிவனுக்கும் நன்கு தெரியும் . எனக்கும் தெரிந்ததால்தான் என் இதயத்தில் மனம் கோணாது நீ வருகிறாய்

பொருள் கோட்டையல்ல என ஆரம்பித்து அருளே கோட்டை என்கிறான் பக்தன்

Abirami Anthathi 58 -61



அன்னை வழிபாட்டில் பக்தன் குழந்தையாகிவிடுகிறான்
அவன் வர்ணிக்கையில் அங்கு ஆபாசம் வருவதில்லை
பிள்ளைக்கு செழுமையாக போதும் போதுமென்கிற அளவு தாய் பாலூட்டும் தருணம் பார்த்துக்கொண்டே இருப்பாளாம்
தருணாம்புயமுலை தையல் நல்லாள்
கொச்சைக்கண்ணர்களுக்கு மட்டுமே விரசமாகத்தெரியும்
நயன விழி என்பது கணவு கண்டு வாந்தியெடுக்கும் காதல்பித்து கவிஞர்களின் வார்த்தை
ஆனால் பக்தனுக்கோ கவ்ரவமான தகைசேர் நயனம் அதில் பிரவகித்து வருவதோ கருணை
இனக்கவர்ச்சி நெஞ்சத்தில் இருக்கும்வரை பெண்ணின் முகத்தை வஞ்சமில்லாமல் பார்க்க முடியாது

தப்பாக எடுத்துகொள்வார்களோ என பார்க்காதபோது பார்ப்பதும் பார்வை வருகிறதோ
ஏனும்போது மாற்றி பார்ப்பதுமாக கண்ணாமூச்சி விளையாட வேண்டியிருக்கிறது

ஆனால் அன்னையோ இளநகை பூத்தவளாக கருணையோடு பார்க்கிறாள்
ஆகவே அவள் வதணத்தை லயித்து பார்க்க முடிகிறது
அந்த மூக்குத்தி
மதுரைக்காரர்கள் வைரமூக்குத்தி வைரமூக்குத்தி என பெருமையாக பேசிக்கொள்வார்கள்
ஒரு தொங்கல் வேறு
காதிலே பப்படம்
இவ்வளவு வெயிட் போட்டால் காது தாங்குமா
காலையிலே பூஜையறையில் இந்த சந்தேகம் வந்து உற்றுப்பார்த்தால் அது கிரீடரத்திலிருந்தே வருகிறது
வதணாம்புயம்
தராம்புயம்
கேளுங்கள் கிடைக்கும்
சரணாம்புயம்
என் பாதத்தை சரணடைந்துவிடு
ஆறுதல் உண்டு தேற்றப்படுவாய்
இவ்வளவையும் ரசிக்கும்போது அவள் சிந்தனையில் இருக்கிறாள்
சித்தாம்புயத்தில் வீற்றிருக்கிறாள்
என் இளவயதில் குருநாதர் ஒருவர் பாக்காத பாக்காத பாக்க பாக்க கவர்ச்சியாக இருக்கும்
ஆனா ஒவ்வொரு பொம்பளயும் பிறவிபிறவியா வாங்கி வச்சுருக்கிற தோசமெல்லாம் உனக்குள்ள ஏறிரும் ஏன்பார்
பட்டினத்தார் பாட்டு கூட சளி மூக்கு கப்பு வாய் ஒய்யாரக்கொண்டை ஈரு பேணி ஏன்றெல்லாம் வாசிக்க சொல்லுவார்
அந்த தோஷத்தை அம்மாவின் அழகை ரசித்து ரசித்து போக்கிக்கொள்ள முடியும்
திரிபுரசுந்தரி யல்லவா
அழகை மெருகூட்டி யாரை மயக்கினாள்
அப்பன் சிவனையல்லவா
சிவன் சிறிதுகாலம் சடையாண்டியாக பித்துபிடித்து அலைந்தார்
தன்குறை தீர எங்கோன் தலைமேல் வைத்த தாமரையே என பாடல் உண்டு
கங்கையும் அன்னையே
அருணை என்பது சிவனின் ஜடாமுடி

அருணாம்புயத்தில் அமர்ந்துள்ள அன்னையை என் சித்தாம்புயத்தில் அமர்த்தினால்
பெண்களை உத்து உத்து பார்த்ததால் வந்தேறிய தோசங்களை போக்கிக்கொள்ள
முடியும்

ஆண்களே ஒரு நாளைக்கு பத்து பத்து பெண்களை உத்து உத்து
பார்தாலே போதும் பல குடும்பத்து பாராம்பரிய தோசங்கள் உங்கள் ஆத்மாவில் ஏறி
பத்து பத்து பிறவி பின்னோக்கி போய்விடுவீர்கள்

பிறகு ஏப்படி தவம் செய்து கிழிப்பீர்கள்
இதற்கு தீர்வுதான் என்ன

முள்ளை முள்ளால் எடுப்பதுபோல பத்து பத்து நிமிடம் அன்னையின் திவ்ய
முகத்தையும் உருவத்தையும் அலங்காரத்தையும் உள்வாங்கினால் அந்த தோசம்
கழிந்து அருள் ஆத்மாவில் நிறையும்

அப்படியே பெண்களால் பாதிக்கப்படாத அளவு ஆத்மசுத்தி உண்டாக உதவிசெய்யும்
இந்த தஞ்சம் தவிர்த்த தவநெறிகளால் ஆண்பெண் பேதத்தை கடறுவது முக்தி எளிதல்ல
அதிதேவர்கள் நால்வர் மிகமுக்கியமானவர்கள்
அருவமான பரம்பொருள் இறைவனின் அடுத்த நேரடியான வெளிப்பாடனவர்கள்
இந்த நால்வரில் அன்னையை அண்ணனான திருமால் தவிர அனைவரும் வணங்குவார்களாம்
மாலினும் தேவர் வணங்க நின்றவள்
சிவனுக்கு அவள் மனைவி ஆனாலும் சிவனுக்கும் அவள் மூத்தவள்
கறைகண்டனுக்கு மூத்தவளே என்றும்
மூவா முகுந்தர்க்கு இளையவளே

என்ற பாடல் வரிகள் உண்டு
கொன்றை வார் சடையில் உச்சியில் பிறையாக அவளே இருக்கிறாள்
சடையில் கங்கையாகவும் அவளே இருக்கிறாள்
கழுத்தில் நாகதேவியாகவும் அவளே இருக்கிறாள்
அட உடலிலே பாதி உடலாகவும் அவளே இருக்கிறாள்
விழுந்து விழுந்து காதலிப்பவள் ; உடல் முழுதும் ஆட்சி செய்பவள்
காமாட்சி
உன்னை உள்ளவண்ணம் அறியும் அறிவை தருவாயா

Abirami Anthathi 62- 65



சுயம் என்ற அகம்பாவம் உடைய அசுரர்களின் முப்புரம் என்ற கோட்டையை
தகர்த்தவரும் ; மதத்தால் சிவந்த கண்ணோடு கொல்ல வந்த யானையின் தோலை உரிந்து
ஆடையாக அணிந்துகொண்டவருமான சிவனை தங்கச்சிலை போன்ற தனது மேனி அழகாலும்
மலர்களும் கரும்பும் அணிந்து சிந்தையில் புகுந்து பகுதி இடம் பிடித்தவள்
அல்லவா

அவளின் சிந்தை என்னையும் அடிமையாக்கட்டும்
நான் தேறும்படி அவள் நிச்சயமாக ஏதுகள் காட்டுவாள்
ஆத்மாக்கள் முன்னேரும்படியா க குன்றில் இட்ட விளக்காக ஆறு சமயங்கள் உலகில் வழிகாட்டுகின்றன
இன்று உலகில் எவ்வளவோ மதங்கள் மார்க்கங்கள் இருக்கலாம் . ஆனால் அவைகளின் அடிப்படைகளை ஆறு மார்க்கங்களுக்குள் வகைப்படுத்தி விடலாம்
இந்த ஆறு மார்க்கங்களில் மிகச்சிறந்தது தலையாயது சாக்தம் என்பது இந்த பக்தனின் முடிவு
சக்தி வழிபாடு தனியாக இருந்தாலும் மற்ற எல்லா மார்க்கங்களிலும் அன்னை ஏதாவது ஒரு இடத்தில் இருப்பாள்
சிவனுக்கு மனைவியாக நாராயணனுக்கு தங்கையாக கிராம தெய்வங்களில் சப்த கண்ணியராக அவள் இல்லாத இடம் இல்லை
ஆகவே இந்த பக்தன் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு இவளை மட்டும் கும்பிட்டா பத்தாதா மற்ற தெய்வத்தை வீணர்கள் கும்பிடுகிறார்கள் என்கிறார்
பொதுவாக இலக்கியத்தில் உயர்த்தி பேசும் இடத்தில் இப்படித்தான் வரும் இதைத்தவிர எதையும் கும்பிட மாட்டேன் வீண் என்று

ஆனால் உடனே மனிதர்கள் எங்கள் தெய்வம் மட்டும்தான் தெய்வம் மற்றதெல்லாம்
கும்பிடக்கூடாது என அடுத்த மத தேவர்களை இகழ்கிறவர்களாக மாறிக்கொள்கிறார்கள்

மதமாச்சரியம் என்பது ஒரு அசுர குணம்
உன் தெய்வத்தை நீ அறிந்திருக்கிறாய் என்பதற்காக அடுத்த தேவர்களை காறித்துப்ப கூடாது
ஆனால் அடுத்த அடியில் ஒரு உண்மையை கூறுகிறார்
வீணே பலிகவர் தெய்வங்கள்பால் சென்று மிக்க அன்பு பூனேன்
இந்து தர்மத்தில் ஆரம்பத்தில் காய் கனிகளை யாகத்தில் சமர்பிக்கும் வழக்கமே இருந்தது
ஒரே ஒரு எலுமிச்சை கனியை சமர்பித்தால் ஆயிரம் ஆடுகளை பலியிட்டதற்கு சமம் என தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது

ஆனால் மனிதர்கள் தங்கள் சொந்த பந்தங்களை சும்மா அழைத்தால் வரமாட்டார்கள்
என்பதற்காக கோழி ஆடுகளை பலியிட்டு தாங்கள் விருந்துகொண்டாடுவதை
தெய்வத்திற்கு பலியிடுவதாக சொல்லிக்கொள்ள ஆரம்பித்தார்கள்

தங்கள் சுய அனுபவத்திற்காக பலியிடுதல் வீணானது
உன்னை புகழ்கின்ற சரணகதிகளுக்கு நிகரானவை உண்டோ
பூமியிலும் பாதாளத்திலும் விண்ணுலகிலும் சொர்க்கத்திலும் உன் திருமேனி பிரகாசத்தை விட மனம் கவருகிற எதுவுமில்லையே

ஈரேழு பதினாலு லோகத்திலும் உள்ளோர் விதிர்த்து நிற்கும்படியாக காம அம்பை
எய்த வந்தவனை சுட்டெரித்தவரான தவயோகியின் பாதி உடலை கைப்பற்றியவள் நீயல்லவா

மனிதர்கள் அனைவரிடத்தும் ஆறு நல்ல குணங்கள் ஆறு தீய குணங்கள் என 3 X 4 = 12 முகங்கள் அவ்வப்போது ஒன்று என வெளிக்காட்டும்
ஆனால் ஆறு நல்ல குணங்கள் மட்டும் உடைய மகனாக முருகனை மாற்றியது உன் வல்லபம் அல்லவா
தாயைப்போல பிள்ளை என்பார்கள்
முருகன் செம்மான் என்றால் தாய் நீயல்லவோ செம்மையான்வள் என்கிறான் பக்தன்

Abirami Anthathi 66 -69



வலிமைகள் நிறைந்தவன் அல்ல நான்
வரங்கள் அருளப்பட்டவனுமில்லை
ஆனால் உன்னை வழிபட்டதால் கிடைக்கும் பலன்களை சொத்தாக வைத்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

பாசுபதாஸ்திரம் உடைய வில்லாளியுடன் வீற்றிருப்பவளே நான் உன்னைப்பற்றி
பேசுகிற வார்த்தைகள் அறியாமையால் உனக்கே விரோதமாக போனால் கூட நின் திருநாம
ஜெபம் செய்வதால் என்னை காத்துவிடுவாயல்லவா

உன் நாமங்களை தோத்திரம் செய்து தொழுது மின்னலைப்போன்ற நின் தோற்றத்தை ஒரு நொடிப்பொழுது தியானத்தில் போதுமே
அவ்வாறு செய்யதவர்களோ வலிமை, குலம்,
கோத்திரம், கல்வி, குணம், குன்றி, நாளும் மெலிந்து வீடுகள் தோறும் பிச்சை கேட்கிற பலிக்கும் ஆளாகிரார்களே


பஞ்ச பூதங்களும் ஆறு அறிவுகளும் ஒன்றாக பொதிந்துள்ள சிவகாம சுந்தரியின்
பாதங்களை சரணடைந்த தவம் உடையோரை சகல செல்வங்களும் தானாக தேடி வரும் அல்லவோ

தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும், தெய்வ வடிவும் தரும்,; இதுவெல்லாம் வந்தாலும் வஞ்சகம் இல்லாத நண்பர்களை உறவினர்களை சுற்றத்தினரை அடைவது அவ்வளவு எளிதா

சகலரையும் ஏதோ ஒருவகையில் சாந்தம் சமாதனப்படுத்தும் மோகனம் யாரிடம் உள்ளது
யாரலும் அடக்க முடியாத அசுரர்களை மோஹினியாக அன்னை வந்து தன் இயல்பால் விக்கித்து நிற்க வைத்தாவள் அல்லவா
அந்த தருணம் பார்த்து அல்லவோ சிவனும் அவர்களை போட்டுத்தள்ளினார்

வில்லவருடன் வீற்று இருப்பவள் அல்லவோ என பக்தன் பாடும்போது அவளுக்கு
பாதுகாப்பாக சிவன் இருக்கிறார் என்பதுபோல வாசகம் வந்தாலும் அந்த வில்லாலும்
பயனற்ற நிலை வந்தபோது அன்னையல்லவோ தந்திரம் செய்து வில்லுக்கே வெற்றி
தேடித்தந்தவள்

வெற்றிக்கே வெற்றி கொடுத்தவள் என பாராட்டி மகிழ்கிறான் பக்தன்

Abirami anthathi 70 - 73



புண்ணியம் நிரம்பிய தாமரையில் குடியிருக்கும் பேரழகே நினது அகண்டகோடி
பிரகாசத்தை தரிசித்து அருள் பெற்ற நான் உன் கால் தூசிக்கு கூட தகுதியில்லாத
பெண்களைப்பார்த்தா மயங்குவேன்

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி
அண்ணையின் அழகை தரிசித்தால் ஒழிய பார்க்கும் பெண்களை ஆ அழகா என வெறிக்கும் கண்கள் மாறாது

மாசுமருவில்லாத அழகான கோமளயாமளை யின் அன்பையும் அருளையும் உள்வாங்கி
விட்டாலோ பார்க்கிற பெண்களிடமெல்லாம் அது குறை இது குறை என்பது போல குறை
தெரிய ஆரம்பிக்கும் நாம் பார்க்கிற பெண்களிடமெல்லாம் அன்னையின் எதோ சில
அம்சங்கள் இருக்குமே தவிர முழு நிறைவு இருக்காது பல குறைகள் தெரிய
ஆரம்பிக்கும்

நானும் கூட சிறுவயதில் இருந்தே இவ்விசயத்தில் எவ்வளவோ
மல்லுக்கட்டிக்கொண்டேதான் இருந்திருக்கிறேன் . அறிவும் அறிவுறுத்தலும்
வைராக்கியமும் கொஞ்ச நாள் நிலைக்கும் , பிறகு எதோ ஒரு சாக்கில்
பிட்டுக்கொள்ளும் .

999 பாடல்களை பக்தி மனம் கமழ அம்பிகாவதி
பாடினாரே அது அவ்வளவு எளிதான காரியமா ? அவ்வளவு மனதை வசப்படுத்தி பாடிய
அவரால் அமராவதியை பார்த்த உடன் காதல் பாடல் பொத்துக்கொண்டு வந்துவிட்டது
காமம் அவ்வளவு வலியது

வழுக்கி வழுக்கி விழுந்துகொண்டும்
பிரார்தித்துக்கொண்டும் இவ்விசயம் ஓடிக்கொண்டு இருந்தது . இறைவனின் கிருபை
அருளால் அன்றி இம்மாயையை வெல்வது இயலாத காரியம் என மனதை தேற்றிக்கொள்வேன்


ஆனால் அதிதேவர் நாராயணியின் மீது பக்தி அதிகரித்ததும் அவரை
அறிந்துகொள்ளவும் உணர்ந்துகொள்ளவும் தொடங்கிய பிறகு அவரில் தியானிக்க
தொடங்கிய பிறகும் என்னை அறியாமல் பார்க்கும் பெண்களிடம் எல்லாம் இது குறை
அது குறை என்பதுபோல எண்ணம் வர ஆரம்பித்தது

பெண்கள் வாழ்வில் படும்
அல்லல்கள் குடும்பம் உய்ய அவர்கள் செய்யும் தியாகங்கள் ; தன் குடும்பத்தின்
கெளரவம் கருதியே அவர்கள் தங்களை அழகு படுத்திக்கொண்டு வெளியே
நடமாடுகிறார்களே தவிர அந்த அழகால் எந்த பயனும் அவர்களுக்கு கிடைப்பதுமில்லை
. என்பதாக எண்ணம் வரத்தொடங்கியது .

எத்தனை பிறவிகள் நானே பெண்ணாக
இருந்திருப்பேன் . ஆணாக பிறந்து பெண்ணை இச்சித்து இச்சித்து வாழ்வதும்
பதிலுக்கு பெண்ணாக பிறந்து ஆண்களிடம் காத்துக்கொள்ள அனுதினமும் பயந்து
பயந்து வாழ்வதுமாக ஆத்மா அல்லாடிக்கொண்டுள்ளது

ஆணும் பெண்ணும் எனக்குள்ளேயே அடக்கம் . நானே என்னை ஏமாற்றிக்கொண்டே அலைகிறேன்
எனக்குள் அடக்கம் என்ற நிறைவு உணரப்படாதபோதே ஆண்பெண் பேதங்கள் இச்சையை தூண்டுகிறது
பலமுறை பூமியில் ஆணாகவும் பெண்ணாகவும் நானே பிறந்திருக்கிறேன் என்பதை உணராமல் பெண்ணிச்சையை கடர முடியாது
தனக்குள்ளேயே ஆணும்பெண்ணும் அடக்கம் என்ற ஞானத்தால் சிவன் காமத்தை சுட்டெரித்தார் ஆகவே சிவனை பெம்மான் என்பார்கள்
அந்த சிவனே அன்றலர்ந்த தாமரை போன்ற அன்னை நாராயணியை தன் தலையில் வைத்தபிறகுதான் அவரது குறையே தீர்ந்ததாம்

சகல செளபாக்கியங்களையும் அலங்கரித்தவளாக அன்னை அமர்ந்திருக்கிறாள் அவரை
வைரவரே போற்றி புகழ்ந்துகொண்டுருக்கிறார் ; ஆனாலும் அன்னை தன்
பிள்ளைகளுக்கென்று சேமம் தர தனது திருவடியை செம்மையான கைகள் நான்கை
ஒதுக்கிவைத்துள்ளாராம்

அவரின் சரீரம் ஒளியாக பிரகாசிக்கிறது .
மூன்று மாயைகளையும் அழிப்பேன் என்பதாக அவளது நாமம் திரிபுரை எனப்படுகிறது
ஞானக்கண்ணோடு பிரகாசிக்கிறாள்

Abirami Anthathi 74 -77



அன்னையின் அடியினை யாரெல்லாம் கவணித்துக்கொண்டே இருப்பார்களாம் ?
நயனங்கள் மூன்று உள்ள சிவன் ; நாராயணன் ; பிரம்மா
மேலும் யார் இந்த வேதம்
யோக அப்பியாசம் தவம் தியானம் விசாரம் ஞானம் ; இவைகள் அனைத்திற்கும் சற்குருவாக ஒருவர் உள்ளார்
அவர் அதிதேவர் ஆதிசேஷன்
விசாரம் எனற ஒன்று ஆதிசேஷன் கிருபையில்லாமல் நடக்காது
சேஷம் கொடுப்பது என பிறந்த குழந்தைக்கு குடும்ப பெரியவர்கள் முதல்முதலாக கொடுப்பார்கள்
அந்த குழந்தைக்கு சேஷம் கொடுத்தவர்களால் குடும்ப பாராம்பரிய உணர்வுகள் தூண்டிவிடப்படும்
சேஷம் என்றால் தூண்டி விடுதல்
வெட்டவெளியில் ஆதியில் இயக்கத்தை தூண்டி விட்டவர் சாட்சாத் ஆதிசேஷனாவார்
அவர் நாராயணனில் ஒரு அங்கம் என்றாலும் தனித்தும் செயல்படுவார்
யார் சித்தி முழுமை தேவத்துவம் அடைந்தார்களோ அவர்கள் அனைவரும் ஆதிசேஷனின் அங்கீகாரத்தை பெறுவார்கள்
சூசகமாக தலையில் ஆதிசேஷனை போட்டிருப்பார்கள்
ஆதிசேசனுக்கு இரண்டு அம்சம் உண்டு
கார்க்கோடன் - விநாயகர் - துவக்குபவர்

செங்கோடன் - முருகன் - ஞான சற்குரு - நிறைவை அருளுபவர் - உள்ளும்
புறம்பும் தீய இயல்புகள் அசுரர்களுடன் யுத்தத்தை நடத்தி நமக்கு ஞானம்
அருளுபவர்

நாம் எந்த குருகுலத்தில் இருந்தாலும் முருகனது அருளைப்பெற வேண்டும்
ஆனால் இந்த நால்வரும் அன்னையின் பாதங்கள் எப்பக்கமாக செல்லுகிறது என கண்காணித்துக்கொண்டே இருப்பார்களாம் என்கிறான் பக்தன்
அந்த அடியோடு இணைந்துள்ள சிந்தனை நமக்கும் வந்தால் சகலதேவர்களின் அருளும் ஆசியும் அறிமுகமும் கிடைத்துவிடும்
அதுவே ராஜயோகம் சித்திப்பதன் திறவுகோல்
ராஜயோகம் கொஞ்சம் வாடை அடித்தாலே போதும் கார்ப்பரேட் சாமியார்களாக வலம்வரத்தொடங்கி விடுவார்கள்
அங்கே பொன்னும் பெண்ணும் குவிந்து பலர் வழுக்கி விடுவதும் உண்டு
அன்னையின் மீதான பக்தி சரணாகதம் இருந்தால் வழுக்காமல் தப்பலாம்
பொன்னும் பெண்ணும் பாதிக்காத நிலையை அடைந்த யோகிகள் மீது இவைகள் நெருக்கமாவதை தவிர்க்கவும் இயலாது
கற்பக விருட்சம் ; காமதேனு பசு அன்னையால் தன் பிள்ளைகளுக்கென்று உருவாக்கப்பட்டது
பரமாத்மாவான மாலை அடையும் வரை உன்னை பிடித்து கீழே இழுப்பார் இல்லாமல் வலுவான பிறவித்தொடரை கடந்து செல்லலாம்
மால்வரையுமான ஈரேழு பதினாலு லோகங்களையும் படைத்தபோது இவள் அதில் பங்கு பெற்றிருந்தாள்
ஆகவே இவளது திருமேனியில் லயித்தவர்களால் பரமாத்மாவை எட்டமுடியும்

வண்டு கிண்டி அவிழும் கொன்றை மலர்களை அணிந்துள்ள ஜடா முடியில் கங்கையை
அணிந்துள்ளவரான சிவனாரின் பகுதி உடம்பை பறித்து அதில் குடிபுகுந்துள்ள உன்
திறத்தை கண்டு வியந்துநிற்கிறேன்

Abirami Anthathi 78 -81



பக்தன் தன் அன்னையின் மீது லயித்து விட்டானானால் அவளின் அழகு அவனுக்கு பெருமையாக தெரிய ஆரம்பித்து விடுகிறது
சமயத்தில் அவளும் ரம்மியத்திற்குள் அவனை ஆழ்த்தி மனதை இதமடைய செய்வாள்
இறை பேரானந்தம் என்று சொல்வார்களே அந்த பரமானந்தம் நிர்விகழ்பமானது
அதை சிறிதேனும் அனுபவித்தவர்க்கு அதற்கான சலிப்பிலாத சாதகம் செய்யத்தோன்றும்
பரமானந்த சாகரம்
அதில் பல நிலைகள் உள்ளன
அவற்றில் ஒன்று அன்னையின் அழகில் லயித்திருப்பது
மோகனம் என்பது மோகத்தில் காமத்தை நீக்கிவிட்டால் வரும் நிலை
காமம் அற்ற மோகம் மோகனம்
செளந்திர்ய லகரி
ஆதிசங்கரர் சுத்த சந்நியாசி
அதுவும் பாலவயதிலேயே சந்நியாசம்
ஒரு பத்து வருடத்திற்குள் இந்தியா முழுதும் கால்நடையாகவே அலைந்து பல சாதனை செய்தவருக்கு நேரம் ஏது
அவரையும் அன்னை தன மோகனத்தில் வீழ்த்தி அவர் வாயாலும் தன் செளந்திர்யத்தை பாட செய்து ரசித்து கேட்டாள்
அதுபோன்ற ஒரு நிலையில் பயித்தியம் போல தியானத்தில் ஆழ்ந்து மோகனத்தில் மூழ்கி கிடந்தவர் அபிராமி பட்டரும்
அம்மாவாசையை பெளர்ணமி என சொல்லியாயிற்று ; நிலவு வராவிட்டால் மரண தண்டனை நிச்சயம்
தப்பி ஓடவா செய்தான் பக்தன்
அவன் சரணாகதி அடைந்து எவளின் மோகனத்தில் லயித்து பரமானந்தம் அடிந்திருந்தானோ அவளையே அவன் பற்றிக்கொண்டான்
மரணபயம் என்பது கிஞ்சித்தும் இல்லை
அந்தாதி என்பது மிகவும் சிக்கலான இலக்கணம் உடையது
முடித்த அடியையே முதலடியாக எடுக்கவேண்டும்
அதில் பொருள் கோர்வையும் வேண்டும்
சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
புள்ளும் பரிமள பூங்கொடியே

என ஒரு இடத்தில் வருணனை கூட உண்டு
புள்ளுதல் என்ற வார்த்தை கோதை அக்கா வும் பயன்படுத்திள்ளார்
புள்ளும் சிலம்பினகால்
குழந்தைக்கு சிலம்பை கொலுசை மாட்டிவிட்டு அது தட்டுத்தடுமாறி ஓடி அந்த சத்தத்தை கேட்டு பேரானந்தம் அடைவார்கள்
இதயத்தின் அடி ஆழம் வரை மகிழ்ச்சியை நிரப்புவது புள்ளும் சிலம்பு
சொற்சுவை பொருள் சுவையோடு நாட்டியம் ஆடும் சிவனாரோடு ஒத்திசைந்து பின்னிப்பிணைந்து பரிமளத்தை அள்ளிக்கொடுப்பவள் இவள்
அந்த அழகில் லயித்து பரமானந்த சாகரத்தில் திலைக்கவைத்தவள் என்னை காக்காமல் விடுவாளா என்ன
அதனால் அவன் சொல்கிறான் எனக்கு துணையாக உன் அழகையே எழுதிவைத்தேன்
கண்ணழகு கண்ணழகு என காதல்வாந்தி கலைஞர்களும் பாடாத இடமில்லை
கண்ணகி கண்ணாத்தாள்
சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடி

பாரதி கொண்டாடிய அதே அர்த்தத்தில் இந்த பக்தனும் சொல்கிறான்
விழியின் கொழுங்கடையும்,
துப்பும், நிலவும் எழுதிவைத்தேன், என் துணை விழிக்கே.

அபிராம வல்லியின் விழிகே அருளுண்டு என்கிறான்
கடைக்கண்ணால் அவள் ஒரே ஒரு பார்வை பார்த்தால் போதாதா
கருணை ஈகை அருள்பாலிப்பு
அவளின் அருள்பாலிப்பாள் வேதங்கள் உணர்ந்து அதன் வழி வாழும் இதயம் வந்துவிடும்
சகல செளபாக்கியங்களும் தேடி வரும்
அப்படியிருக்க உலக வாழ்க்கை உலக வாழ்க்கை என பழிக்கே உழலும் மனிதர்களின் தயவு எனக்கு அவசியமில்லை
தனித்திரு விழித்திரு என்பது இறைவனோடும் இறைவனது பரமண்டல சக்திகளோடு கூட்டை உறவை நிலைநாட்டிக்கொண்டவர்க்கு மட்டுமே வருவது
அவனுக்கு ஒத்தாசை பரத்திளிருந்தே வரும்
உலகம் வேண்டுமானால் அவனை கண்டுணர்ந்து அவன் பின்னால் ஓடினால் பயனடையும்
அவனுக்கு உலகம் அவசியமில்லை
தன் அடியாரிடம் கூறி அவளே கூட்டத்தையும் உண்டாக்கித்தருவாள்
கொடிய வினைகளையும் களைந்து பிறவித்தளையையும் அறுத்தெறிவாள்
கண்ணால் காணும் பாக்கியத்தை அருளுவாள்
தன்னை உள்ளது உள்ளவாறு தெளிவாக அறியத்தருவாள்
சப்த மாதர்கள் வேறு சப்த கன்னியர் வேறு என்பதை 50 வயது கடந்துதான் அறிந்தேன்
கெளரி சப்தமாதர்களின் தலைவி என்றால் காளி சப்தகண்ணியரின் தலைவி
அபிராமி காமாட்சி மீனாட்சி என்பவர்களெல்லாம் காளியே என்பதை சிலமாதங்கள் முன்புதான் உணர்ந்தேன்

அகோரமான காளியே மகா சிருங்காரியாகவும் ஆரணங்காகவும் மாறி சிவனை மயக்கி
அடக்கி வைத்து கலியுக வாழ்வும் நடக்கும்படியாக அருளாட்சி செய்து வருகிறாள்

மாத்தவள்
மாத்தவள் என்பதைப்பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்
உலகின் சொப்பன சுந்தரிகள் யார் இருந்தாலும் அவர்கள் அன்னையின் பரிவாரங்கள் ஆகும்
வேலைக்காரிகள் ஆகும்
எஜமானியே எனக்கு வேண்டியவாளன பிறகு இந்த வேலைகாரிகளை நான் என்ன மதிப்பது
ஆ ஆ அழகு என ஆராதிப்பது
மாசு மருவில்லாத அழகு என்றால் அன்னை ஒருத்தி மட்டுமே
மற்றெல்லா அணங்குகளிடமும் நிச்சயமாக ஒரு சின்ன சொள்ளை இருக்கும்
ஆனால் நிறைவான அழகு அடக்கமாக பரிமளிக்கும் . தாய்மையே வடிவான அத்தகு பெண்கள் உன் அருள் பெற்றவர்கள்
குறைகளோ கூத்தாடும்
அலப்பறை செய்யும்
அந்த அலப்பறை ஒரு மாயை வஞ்சகம்
அதற்கு நான் இணங்கேன்
அவர்களால் பாதிக்கப்படாத இயல்பு ; என் கண்கள் உன்னை தரிசித்ததால் உண்டானது

Abirami Anthathi 1 - 4

தார் தாரகா பூக்கும் கொன்றை மலர்களையும் சண்பக மலர்களால் ஆன மாலைகளையும் விரும்பி அணியும் தில்லை ஊரார் சிவனின் இடபாகத்தை கைப்பற்றிக்க...