Total Pageviews

Sunday, 18 August 2019

Abirami Anthathi 36-40





இல்லை எனாத அளவு பொருள் வேண்டும்

அந்த பொருளை தர வல்லவள் அன்னை
ஆனால் அந்த பொருள் போகத்தை தர வல்லது
அதில் மூழ்கி அக்கிரமம் ஆட்டம் பாட்டம் எல்லாமே தரவல்லது மருள்
ஒன்றுமே அறியாத ஒரு ஆத்மா பாவமில்லாததுவே
ஆனால் ஞானம் அதுவல்ல
நல்லது கெட்டது எல்லாவற்றையும் ஆண்டு அணுபவித்து தெளிந்து அதன் ஆதிக்கத்திலிருந்து விடுபடும் பக்குவம் அடைந்தாலே ஞானம்
மருளில் வரும் தெருளே ஞானம்
மனதில் வந்த வஞ்சத்து இருள் ஏதுமின்றி அகன்று ஒளியாக மாறவேண்டுமாம்

ஆதிமனிதனாக தன்னை தரம் தாழ்த்தி பூமிக்கு வந்த சிவனார் மீண்டும் சாதாரண
சரீரத்தை ஒளி சரீரமாக மாற்றி வைரவனாக மாறினார் என வைரவன்பட்டி கோயிலில்
அடையாளப்படுத்தி உள்ளனர்

அங்கு சுவாமியின் பெயர் வளர்ஒளி நாதர்
உலகியல் மாயையில் விழுந்து அதிலிருந்து விடுபட்டால் வைரவ நிலை அடையலாம்
பாவத்தில் இழுத்து விடுபவள் காளி
அதிலிருந்து விடுவித்து விடுபவள் பவதாரனி
சிவனை மிதித்தாள் காளி
சிவனை ஆராதித்தால் பவதாரனி
ஜெகமோகினியும் அவளே
சிவகாமியும் அவளே

அவளது அன்பை பெறாமல் யோக்கலையின் மூலமாகவும் தானதர்மங்களின் மூலமாகவும் முழுமை அடையமுடியாது
வள்ளாலாருக்கு அவரது அண்ணி ரூபத்தில் வந்து ஒற்றியூர் வடிவாம்பிகை உணவளித்தாள்

மற்றுமொரு தேவதை உங்களையே திருமணம் முடிப்பேன் ; ஒரு சிறு துரும்பும்
உங்களை தொந்திரவு செய்யமாட்டேன் என வாழ்ந்தாளே தன் பிரார்த்தனயால்
வள்ளலாருக்கு பாதுகாப்பளித்தவள் அவள்

அன்னை அவளது பரிவார தேவதைகளின் கருணை இல்லாமல் ஆன்ம வாழ்வில் முன்னேற முடியாது

ஆணவம் ; கண்மம் , மாயை என்ற மூன்றாள் கோட்டை கட்டி அதற்குள் இருந்து
ராஜ்ஜியம் செய்யும் அசுரர்கள் மீது அக்கோட்டை தீயுண்டு மாளும்படியாக
சிவனார் அம்பு தொடுத்த போது அவரோடு உடன் இருந்தவள் நீ என்றல்லவோ இப்பாடல்
சொல்லுகிறது

இதில் உணரவேண்டிய இரகசியம் ; அவளை சிவனோடு இணைத்து இணைத்து பார்க்கவேண்டும்
அன்னையின் அழகே அவளுக்கு சிறப்பு
அந்த அழகை புகழ்ந்து லயிப்பது என்பதும் அருளை உள்வாங்கும் எளிய வழி
சிவனோடு இணைத்து ரசித்தால் அது அருள்
தனியாக ரசித்தாள் மருள்
அபிராமி அந்தாதி முழுவதும் இந்த ரகசியம் வலியுறுத்தப்படுகிறது
அம்மை அப்பனாக இணைத்து பார்த்தால் பலவகை தோசங்கள் கரையும் என்பதாலேயே பிரதோசத்தன்று இணைத்து வலம் வருகிறார்கள்
எளியவர்களை சிக்கல்களிலிருந்து விடுவிக்க வேண்டுமா வெள்ளிக்கிழமை பள்ளியறை பூஜையில் கலந்துகொள்ள சொல்லுங்கள்
விடுதலை கிடைக்கும்

No comments:

Post a Comment

Abirami Anthathi 1 - 4

தார் தாரகா பூக்கும் கொன்றை மலர்களையும் சண்பக மலர்களால் ஆன மாலைகளையும் விரும்பி அணியும் தில்லை ஊரார் சிவனின் இடபாகத்தை கைப்பற்றிக்க...