Total Pageviews

Sunday, 18 August 2019

Abirami Anthathi 5 - 9



பக்தனுக்கு வியப்பு உண்டாகிறது
கணவனைப்போலவே இவளும் மூன்றாவது கண்ணை திறந்துகொண்ட வல்லமை உள்ளவள்
மனம் செம்மையாகும் போது ; பக்குவப்படும்போது மட்டுமே மனோன்மணியாக மூன்றாவது கண் திறக்கப்படும்
மூன்றாவது கண் திறக்கப்பட்டவர்களால் முக்காலத்தையும் உணரமுடியும்
இறைவனையும் அவரது தேவமண்டல சக்திகள் பலரையும் தரிசிக்க முடியும்
அவர்களோடு பேசவும் இறைவனது நடப்பு சித்தத்தை உணர்ந்து அதற்காக பிரார்த்திக்கவும் ஒத்துழைப்பு செய்யவும் முடியும்
கலியுகத்தை முடிப்பதற்கு பலவகையான முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டாக வேண்டும்
பல புருஷர்களின் பாவசாபங்களில் விமோசனம் அடைந்தாக வேண்டும்
அத்தகையவர்களே பூமியில் இறைபேரரசை வரவேற்கும் காரியத்தை செய்யமுடியும்
அம்மையும் அப்பனும் என்ற முறையில் அத்தகைய மனிதர்களை பூமியில் சாதனை செய்விக்கும் பொறுப்பு இவர்களுக்கும் இருக்கிறது

தன் கணவரோடு பொருந்திய சிந்தனை இவளுக்கு எப்படி இயல்பாக வருகிறது என்றால்
அவரின் நெஞ்சோடு புறக்க அவளின் மார்பு எப்போதும் வருந்திக்கொண்டே
இருக்கிறதாம்

அதுமட்டுமல்ல அவர் விசத்தை குடித்தபோது அந்த நஞ்சை அமுதமாக ஆக்கி அவரை காத்தது யார் என்றால் அது அம்பிகையின் உள்ளங்கைகைகள் ஆகும்
அவள் தன் கையால் அவரின் கழுத்தை பிடித்து விசத்தை அமுதமாக மாற்றிவிட்டாள்
சிவனாரின் கழுத்திலே நின்ற விசத்தை அவர் கழுத்தில் உள்ள நாகமாக அடையாளப்படுத்தினார்கள்
அது ஏதென்றால் அம்பிகையின் சேடிமார்கள் எழுவரும் வாசுகியின் அம்சமானர்கள்
சப்தகன்னியர்
எழுவர் ஒன்று சேர்ந்தால் எவ்வளவு சக்தியோ அவ்வளவு சக்தி உள்ளவள் அன்னை
அவளால் நஞ்சு அமுதமாக மாறாதா
ஆனாலும் அந்த சனப்பொழுதில் விஷம் சிவனாருக்கு பாதிப்பை கொடுத்து அவர் மயக்கமுற்று சுருண்டு படுத்துவிட்டார்
அவரை தன் மடியில் தாங்கி அன்னை ஆசுவசப்படுத்தினாள்
சகல தேவர்களும் வந்து சிவனாருக்காக ஆதி இறைவனை பிரார்த்தித்தார்கள்
இந்த ஸ்தலமே சுருட்டப்பள்ளி எனப்படுகிறது
பரத்திலே தோஷம் பாதித்தது என்பதாலேயே பர + தோஷம் = பிரதோஷம் என்பதாக அந்த நிகழ்வு அடையாளப்படுத்தப்படுகிறது
அம்மையையும் அப்பனையும் சேர்த்து சப்பரத்தில் சுற்றி தரிசிக்க வைப்பார்கள்

நான் மீண்டும் மீண்டும் சொல்வது நம் புராணங்கள் சிவன் வரம் கொடுத்து
மாட்டிக்கொள்வார் நாராயணன் வந்து கப்பார் ; நாராயணன் வரம் கொடுத்து
மாட்டிக்கொள்வார் சிவன் வந்து காப்பார் என பலமுறை சொல்லும்

எங்கே சிவனும் நாராயணனும் ஒன்றாக சேர்ந்து இருப்பார்களோ அங்கே வெற்றி அதாவது இறைவனின் முழுபிரசன்னம் இருக்கும்
ஆகவேதான் சிவன் கோவில்களில் அன்னை வடிவில் நாராயணனின் அம்சத்தை சிவனோடு சேர்த்து பிரதோசத்தில் சுற்றிக்காட்டுகிறார்கள்
பாற்கடலை கடையும்போது ஆதிசேஷன் கக்கிய விசமாக முந்திவந்தவள் காளியே ஆகும்
நாகேஸ்வரியும் அவளே
ஆனால் அன்னையாக சாந்தமாக சிவனின் துணையாக தன்னை திருத்திக்காட்டுபவள் அவள்
காளியே காமாட்சியாக மீனாட்சியாக விசாலாட்சியாக தன்னை மாற்றி காட்டுவதால்தான் அவளை கெளமாரி என்கிறார்கள்
பக்தன் திருந்திய சுந்தரி என்கிறான்
அவள் மரணத்தை வெல்லக்கூடியவள் - அந்தரி
அவளின்பொற்பாதங்கள் என் தலையில் பாவட்டும் என்கிறான் பக்தன்
என் தலையில் இருப்பது உன் பாதங்கள் என்றால் என் சிந்தையில் மண்டிக்கிடப்பதோ உன் திருநாமங்கள்
உன் அடியாருடன் கூடி முறை முறையாக பல வழிகளில் பரமாகம பக்திகளை நான் முன்னெடுத்துக்கொண்டிருக்கிறேன்
உன்னைக்குறித்த தாகத்தால் என் ஆவி தயிர் கடையும் மத்தைப்போல சுழன்று கொண்டுகிறது
ஆனாலும் தளர்வு சோர்வு அடையாதபடிக்கு நற்கதியை நீயே வழங்குகிராய்
பிரம்மாவும் சிவனும் நாராயணனும் துதிக்க கூடிய சிறந்த பாதங்களை உடைய சிந்துர சுந்தரியே
என் தந்தையின் துணைவியே மகிசாசூரனை கொன்று அவன் தலையை பாதபடியாக மாற்றிக்கொண்டவளே
நீலி அழியாத கன்னியே
ஆரனத்தோனின் சரீரத்தில் நறுமணகந்தங்களை தரிக்கும் உள்ளங்கைகளை உடையவளே
என் பாவப்பதிவுகளை நீயே மாற்றியருள வேண்டும்
சிவனின் மீதுகொண்ட தாபத்தால் கருத்த கண்ணை உடையவளே
பிள்ளைக்களுக்கு பால் அருளுவதர்காக பெருத்த தனங்களை உடையவளே

திருமார்பில் ஆபரணங்களும் இடுப்பில் ஆரமும் அம்பையொத்த கண்களும்
செங்கைகளும் சிலை போன்ற மேனியையும் உடைய நீ உன் மனவாளனோடு எனக்கு காட்சி
அருள்வாயாக

No comments:

Post a Comment

Abirami Anthathi 1 - 4

தார் தாரகா பூக்கும் கொன்றை மலர்களையும் சண்பக மலர்களால் ஆன மாலைகளையும் விரும்பி அணியும் தில்லை ஊரார் சிவனின் இடபாகத்தை கைப்பற்றிக்க...