Total Pageviews

Sunday, 18 August 2019

Abirami Anthathi 31-35



பக்தனுக்கு புளகாங்கிதம் உண்டாகிவிட்டது . மனித இயல்பு ஒரு நன்மையை
பார்த்ததும் இதைத்தவிர வேறு சிறப்பானவைகளே இல்லை என்று கூறுவதாகும்

இதை ஒரு புகழ்ச்சி அணியாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர ; தத்துவமாக வேதமாக ஆக்கிக்கொள்ள கூடாது
இந்த வார்த்தைகளை காரணம் காட்டி இதை தவிர எதையுமே வழிபடக்கூடாது என்று தீவிரவாதம் பேசக்கூடாது

ஆனாலும் பக்தன் ஒரு உண்மையை இங்கு சொல்கிறான் ; அது ஏதென்றால் எங்கு
சிவனும் நாராயணனும் ஒன்றாக அழைக்கப்படுகிறார்களோ அங்கு இறைவனின் முழு
பிரசன்னம் வந்துவிடுகிறது

உமையானவள் அம்சத்தில் நாராயணன் ஆவாள் . நாராயணனின் ஒரு வியாபகமே நாராயணியாக மாறி சிவனுக்கு மனைவியானாள்

இடைப்பட்ட காலத்தில் சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் குடுமி பிடி
சண்டையாகி மதவாதம் மதவெறி பிடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் கொன்று கொன்று
அலைந்தனர்

மனிதர்களுக்கு கொஞ்சம் அழிக்கும் சக்தியை இறைவன்
கொடுத்திருக்கிறார் . அசுரர்கள் அதை தூண்டி விடும்போது அதுவும் நீ
கும்பிடுவதுதான் இறைவன் அடுத்தவர் கும்பிடுவது இறைவனல்ல ; அவர்களை கொன்றால்
உன் இறைவன் உனக்கு சொர்க்கம் கொடுத்தே தீருவது என காத்திருக்கிறார்
என்றவுடன் தங்கள் கொலைவெறியை தீர்த்துக்கொள்ள தயாராகி விடுகிறார்கள்


அடிதடி கலாட்டா செய்து தன் இச்சையை தீர்த்துக்கொள்ளலாம் ; சொர்க்கத்துக்கு
சொர்க்கமும் கிடைக்கும் என்றவுடன் கடவுளையே காக்க அவதாரம் எடுத்து
வந்தவர்களாக தங்களை கருதிக்கொள்கிறார்கள்

வைணவர்களை கொன்றொழித்த சைவர்கள் சிவாலயங்களில் அன்னையை நாராயணி நமஸ்துதே என துதி சொல்லும்போதாவது யோசித்திருக்க வேண்டாமா
சைவர்களை கொன்றொழித்த வைணவர்கள் விண்ணகரங்களில் தாயாராக சிவனின் அம்சமே அமர்ந்திருப்பதை யோசித்திருக்க வேண்டாமா

மகாலக்ஷ்மியே என ஆயிரம் முறை அழைத்தாலும் அவள் கண் பார்க்கவில்லை என்றால்
ஷிவானியை நமஸ்துதே என துதி சொல்லிப்பாருங்கள் அள்ளி அள்ளி கொடுப்பாள்


அப்படி உமையாக நாராயண அம்சமும் சிவனும் ஒன்றாக வந்து தன்னை பக்திக்கு
ஆட்கொள்ள செய்தனர் ; ஆகவே நான் யோசிக்க வேண்டிய விசயமே இல்லை என்கிறான்

ஆசைக்கடலில் அகப்பட்டவன் ; அந்தகன் கைப்பட தகுதி உள்ளவன் ; ஆனாலும் தாமரைப்பாதங்களை என் தலைமேல் வைத்து திருவடி தீட்சை கொடுத்தாய்
நான் செய்த பாவங்கள் காரணமாக காலன் வியாதிகளால் பீடிக்க வரும்போது ; வந்து அஞ்சாதே என்பாய்
என் மனம் உழையும் போதெல்லாம் வந்தோடி அன்னையே என்பேன்
வலிய என் மீது நேசம் கொண்டாய் ; உனது வசிப்பிடம் தகுதிகள் யாவற்றையும் எனக்கும் கொடுப்பாய்
இந்த புண்ணியம் யாருக்கு கிடைக்கும்
எனக்கு கிடைத்தது போல ; என் முன்னோர்களுக்கும் இந்த புண்ணியம் கிடைக்குமோ
தரங்கக்கடலில் ஆதிசேஷனாரின் மீது அறிதுயில் கொள்ளும் பரமாத்மாவே ; நாராயணனே
பக்தன் அன்னையை நேசித்தவன் ; பக்தி தொண்டு செய்கிறவன்
ஆனாலும் அவள் நாராயணனின் அம்சமே என்பதை அறிந்தே இருக்கிறான்

No comments:

Post a Comment

Abirami Anthathi 1 - 4

தார் தாரகா பூக்கும் கொன்றை மலர்களையும் சண்பக மலர்களால் ஆன மாலைகளையும் விரும்பி அணியும் தில்லை ஊரார் சிவனின் இடபாகத்தை கைப்பற்றிக்க...