திருநீர்மலையில் நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் என நாராயணனை சேவை சாதிக்க வைத்திர்ப்பார்கள்
உலகம் முழுதும் தண்ணீர் கடலில் முழ்கியிருந்த போது முதலில் வெளிப்பட்ட நிலம் எதுவென்றால் அது திருநீர்மலை என்பது ஐதீகம்
அதிதேவர் நாராயணன் எல்லா நிலைகளிலும் பக்தர்களுக்காக சேவை சாதிப்பதுபோல இங்கு பக்தன் எல்லா நிலைகளிலும் அன்னையை பக்தி செய்வதாக கூறுக்கிறான்
எப்போதும் உன் நினைவாகவே நான் இருக்கிறேன் ; உன் மலர்ப்பாதங்களையே போற்றி வழிபடுகிறேன்
உமையே ; உன்னதமான ஞானிகளின் உச்சித்தாமரையில் அன்றாடம் புத்தியிர்பாக உதித்து கழிவுகளை கடத்திவிடுபவளே
பிராணன் ஆகவும் அபானன் ஆகவும் வளர்சிதை மாற்றங்களை சகல ஜீவர்களுக்கும் அன்னையே நடத்துகிராளாம்
அன்னையின் சில அம்சங்களை அன்றே பிறந்து அன்றே அழிபவள் என்பதாக ஐதீகப்படுத்துவார்கள்
முத்தாலம்மன் வழிபாடுகளில் பீடங்களில் நிரந்தர சிலை இருக்காது
திருவிழாவுக்கு சிலை செய்துகொண்டுவருவார்கள்
காலையில் கண் திறந்து வழிபாடுகள் செய்து அன்று மாலையே ஆற்றில் கரைத்துவிடுவார்கள்
அன்றே தோன்றி அன்றே மறைவது என்பது வளர்சிதை மாற்றம் என்ற சக்தியை குறிப்பது
அது சரியாக இருந்தால்மட்டுமே அழியாத முக்தி ஆனந்தம் என்ற நிலையை எட்டமுடியும்
உயிர்ப்புள்ள ஜீவனுள்ள அதிதேவர் அன்னை நாராயணி ஆவார்
அவரே சாந்தியை சமாதானத்தை சுகவாழ்வை கொடுக்கவல்ல அதிதேவர் ஆவார்
வெளிநாட்டுவேதங்களில் அன்னையை ஆர்க் ஏஞ்சல் ராபேல் என்கிறார்கள்
இறைவனது ராஜ்ஜியத்தில் இவரே சமாதான காரணி
சகல அதிதேவர்களுக்கும் நல்லினக்கமானவள்
வரப்போகிற சத்திய யுகத்திற்கு முன்பு அச்சாரமாக கலியுகத்தை முடிவுக்கு கொண்டுவருகிற வல்லமை ; சகல முரண்பாடுகளையும் நீர்த்து போகச்செய்து சமரசப்படுத்தி இறைவனோடு உலகத்தை இணக்கப்படுத்தும் சமரச வேதத்தை கொண்டுவரும் இறைத்தூதர் அன்னையின் சீடராகமே இருப்பார் என்பது முன்னறிவிப்பு
அவர் மூலமாக சகல மதங்களையும் ஒருகினைக்கும் அந்த வேதம் வெளிப்படும்
அது இதுவரை உலகில் வெளிப்படையாகவில்லை
அந்த எழுதா மறையின் அரும்பொருள் அன்னையே ஆகும் என்கிறான் பக்தன்
என் அறிவாகவும் அருளமுது நிரம்புவதால் உண்டாகும் ஞானமாகவும் வானத்திற்கு அந்தம் எல்லை எவ்வளவோ அவ்வளவு வடிவம் உடைய மாசக்தியாகவும் நீல நிறமாகவும் கானமாகவும் அதற்கு இசைந்து ஆடும் மாயிலாகவும் சிவனாரின் கண்களுக்கு இதமளிப்பவலாகவும் உள்ளவள் நீ
இதுவரை வெளிப்பட்ட வேதங்கள் நான்கிற்கும் முடிவாக அதாவது சங்கமிக்கும் சமரசவேதம் உன் பாதாரவிந்த்தங்களில் சரணடைவோறுக்கு வெலிப்படையாகும்
உன் புகழ் பாடுவதே எனக்கு ஆத்மதிருப்தி கொடுக்கிறது . உனது இயல்புகள் ஒவ்வொன்றாக உணர்ந்து அவைகளால் உனக்கு உண்டான பெயர்களை கற்றுவருகிறேன்
பகல் இரவாக உன்பாதாம் புயத்தில் கசிந்து பக்தி செய்வதால் உன்னை நயந்தோர் அவையில் என்னை முன் நிறுத்துகிறாய்
என் வாழ்விலும் அவைகளில் முக்கிய இடம் கிடைக்கும் அந்தஸ்துகள் உன் கிருபையால் வருபவை
ஈரேழு பதினான்கு லோகங்களையும் பூத்தவள் புவனேஸ்வரி
அதை காக்கிரவலும் பின்பு கழிவுகளை நீக்குகிரவளும் அவளே
சிவனார் பரலோகத்தில் படைக்கப்படும் முன்பே சக்தியாக அன்னை அங்கே இருந்தாள் ; அதனால் மூத்தவள்
மூவராகவும் தனித்தனியே பிரிந்தும் இயங்குவார்கள் அதே நேரத்தில் ஒருவர் போல இணைந்தும் இயங்குவார்கள் ; அப்படியொரு நிலை பரத்திலே உள்ளது அவரே முகுந்தரான நாராயணன்
ஒருவராக அறிதுயில் கொண்டிருப்பார் நாராயணன்
விஷ்ணு ஆதிசேஷன் நாராயணி என மூவராகவும் தனித்தனியே இயங்குவார்கள்
மூப்பு இல்லாத இந்த முகுந்தரில் இளையவள் அன்னை செல்லம்
மூத்தவள் இளையவள் அதே நேரத்தில் மாத்தவளும் கூட
மாத்தவள்
என் வழி தனீ வழி என மாற்றுப்பாதையில் செல்பவள்
அல்லது கணவனை விட்டு விலகி தனியே இருப்பவள்
காளீஸ்வரி
அன்னையின் ஒரு வியாபகம் ஆனால் சிவனோடு ஒற்றுமையாக இல்லை
கலியுகத்தில் கலி நடக்கவேண்டும்
அதற்கு தீமை ஆசாபாசம் அக்கிரமம் செய்பவர்களும் இருக்கவேண்டும்
நல்லது கெட்டது கலந்து செய்பவர்களுக்கு சிவன் முதலான நான்கு அதிதேவர்களும் ஆசி செய்வதில்லை
ஆனால் பாவத்தில் ஆழ்ந்து செல்லவும் காளி அனுக்ரகம் செய்வாள்
பதில் விளைவுகள் வரும்போது தாங்கி திருத்தி நல்வழிப்படுத்தி ஞானமளித்து கடைதேறவும் பவதாரிணியாக அருளவும் செய்வாள்
அது தாயுள்ளம்
மென்கடி ; மென்மையான பாசாங்குசம் உடையவள்
மென்மையாக திருத்துவாள் ; அவ்வளவு எளிதாக அழிக்கமாட்டாள்
ஆனால் அக்கிரமம் பெருத்தாலோ போட்டும் தள்ளி விடுவாள் காளீஸ்வரி
அன்னையே உன்னை சரணடைந்தோர் நிச்சயமாக வானவர்களாக ஒரு நாள் ஆவார்கள்
உன்னையே சிந்திப்பவர் பிரம்மா நாராயணர் சிவனாலும் பாதுகாப்பு பெறுவார்கள்
மற்ற எல்லா அதிதேவர்களைக்காட்டிலும் உன் அருளாசியை தரிசனத்தை பெறுவது எளிது
No comments:
Post a Comment