Total Pageviews

Sunday, 18 August 2019

Abirami Anthathi 1 - 4




தார் தாரகா பூக்கும் கொன்றை மலர்களையும் சண்பக மலர்களால் ஆன
மாலைகளையும் விரும்பி அணியும் தில்லை ஊரார் சிவனின் இடபாகத்தை
கைப்பற்றிக்கொண்டவளான உமையின் மைந்தனான கணபதியே ; மேகம் குவிந்த மேனியை
உடையவரே

ஏழு லோகங்களை பூத்தவளான அன்னை அபிராமியைப்பற்றிய சிறப்பான
அந்தாதி இரவு பகலாக என் சிந்தையை ஆட்கொண்டதால் மதிமயங்கி பயித்தியம் போல
நான் ஆனதை நீ அறிவாய்

அபிராமி பட்டர் வரலாறை அறிந்தவர்களுக்கு சில
நாட்களாக அவர் பூசை பணியை ஒழுங்காக செய்யாது ; கோயில் வளாகத்தில் அங்கும்
இங்கும் அமர்ந்துகொண்டு தியானத்தில் ஆழ்ந்துகிடந்தார் அவராக சிரிப்பதும்
அழுவதும் பயித்தியம் போன்ற முகபாவனைகள் வேறு அவரிடமிருந்து
வந்துகொண்டிருந்தன

இப்படி இருப்பவை மற்ற பட்டர்கள் ; பொதுமக்கள் எதோ ஆயிருச்சு என்கிற அல்;அளவில் உச்சுக்கொட்டி கொண்டிருந்தனர்
அப்படி பரவசத்தில் அவர் ஆழ்ந்திருக்கும் போது அங்கு தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் வந்துவிடுகிறார்

பராக் பராக் என்ற கட்டியத்தை கேட்டு எழுந்து சகலரும் மரியாதை செழுத்த புற
உலகை மறந்து தியானத்தில் சிரித்துக்கொண்டும் அழுதுகொண்டும் இருந்த பட்டர்
எழுந்து நிற்கவில்லை என்பது மன்னருக்கு கோபத்தை உண்டாக்குகிறது


மன்னரின் முகபாவனையை கண்டு அவன் யார் பேச்சையும் கேட்கமாட்டான் ; ரெம்ப
ஆன்மீக பெரியவன் போல தரிக்கியும் திரிகிறான் என மற்றவர்கள் ஏற்றிவிட்டனர்


ஆகவே மன்னன் பட்டரை தட்டி யோவ் இன்னக்கி என்ன திதி என கேட்க உணர்வில்
அன்னை முகத்தை கண்டு களித்துக்கொண்டிருந்த பட்டர் பெளர்ணமி என பகிர்கிறார்

ஆனால் உண்மையில் அன்று அம்மாவாசை திதி
மன்னர் அவரை உலுப்ப அவர் பதறியடித்துக்கொண்டு விழிக்கிறார்
நான் மன்னன் வரும்போது மதிக்கவுமில்லை ; சரியான மண்டக்கிராக்கு என எல்லோரும் உன்னைப்பற்றி சொல்லுகிறார்கள்
திதி என்னான்னு கேட்ட அம்மாவசையை பெளர்ணமி என்கிறாயா
இன்று இரவு 7 மணிக்கு பெளர்ணமி வரலை என்றால் நீ செத்த என காவலுக்கு ஆள் போட்டுவிட்டு தங்கப்போய் விட்டார் மன்னர்
கிராக்கு செத்தான் இன்னைக்கு சங்குதான் என மற்றவர்கள் கிண்டல் வேறு
ஆனால் பட்டர் தன்னிலை விளக்கம் காப்புபாடலில் கணபதியிடம் சொல்கிறார்
நான் பல நாட்களாக மனத்தில் லயித்து ரசித்து உருவாக்கிய அபிராமி அந்தாதி என் மனதில் உள்ளது
அதை கட்டுரையாக வெளியே கொண்டு வர நீர் உதவி செய்யவேண்டும் என்கிறார்
அந்தாதி என்பது இலக்கணத்தில் சிக்கலான ஒன்று
முடிக்கிற வார்த்தையையே அடுத்த பாடலின் துவக்க வார்த்தையாக வரவேண்டும்
நீ ஒரு 1௦௦ பாட்டு அந்தாதி பாடினால் உன்னை விட்டுவிடுகிறேன் என மன்னர் சொல்லவில்லை
முழுநிலாவை வரவைக்கவேண்டும் என்பதே மன்னர் உத்தரவு
மரணம் வாசலில் நிற்கும்போது வேண்டுதல் செய்வார்களே தவிர சிக்கலான அந்தாதியை படவேண்டிய அவசியம் என்ன
என்ன என்றால் இந்த அந்தாதி பல நாட்களாக அவரின் மனதில் உருவாகி கட்டுரையாக வெளியே வராமல் இருந்த ஒன்று
அதில் ரசித்து லயித்து உருகி ஆனந்த பரவசத்தில் இருந்தவர் பட்டர்
அந்த பரமானந்த சுகத்தை அவள் தன்னைப்பற்றி வெளிப்படுத்தாமல் அவரால் அடையவே முடியாது
அந்த அனுபவம் உறவு அவருக்கு இருந்ததால் உள்ளே விளைந்ததை வெளியே கொட்டினார் அவ்வளவே
################

மனிதர்க்கு உச்சித்திலகமாக நெற்றிப்பொட்டு உள்ளது . அதில் குண்டலினி சக்தி
ஏறிவந்து செங்கதிர் போல சித்தர்களுக்கும் முக்தர்களுக்கும் உதிக்குமாம் .
அப்படி உதிப்பவர்க்கு அது மூன்றாவது கண் போல

ஆவிமண்டல சக்திகளின் இயக்கம் மற்றும் இறைவனைப்பற்றிய வெளிப்பாடுகள்
முக்காலத்தைப்பற்றியும் பல ரகசியங்களை அவர்கள் பெருவார்கள்
அத்தகைய ஞானிகளில் மாணிக்கம் போன்றவர் அதிதேவர் சிவன்
அவரிலிருந்து மாதுளம்போது போல பரிசுத்த தன்மை தாமரைப்பூவில் லக்ஷ்மியாக உதித்தது
பரிசுத்தமான லக்ஷ்மியை சிவன் விஷ்ணுவுக்கு அளிக்க அவர் தன் திருமார்பில் ஏற்றுக்கொண்டார்
பக்தன் இங்கு சொல்ல வருவது அந்த லக்ஷ்மியே துதிக்கும் மின்னல்கொடி அன்னை என்கிறான்
அது ஏதென்றால் சிவன் கடவுளுக்கு இணையானவராக பரலோகத்தில் படைக்கப்பட்டாலும் சாதாரண மனிதனைப்போல பூமிக்கு வந்தார்
அசுரர்கள் பார்வதியை மதிபிரளச்செய்து தீக்குள் சுயஹத்தி செய்யவைத்தார்கள்
அந்த விரக்தியால் சடையாண்டியாக சுடலைகள் தோறும் தியானம் செய்துவந்தார்

அதனால் இறக்கப்பட்டு நாராயணன் தன்னில் ஒரு வியாபகத்தை அன்னை நாராயணியாக
வெளிப்படுத்தி அவரே பூமியில் மதங்கரிஷியின் யாகத்தில் வெளிப்பட்டார்

அவர் வளர்ந்து சிவனை கவர திரிபுரசுந்தரியாக மோகனம் காட்டியும் ஆதியில் சிவன் பார்வதியின் மீதுள்ள பற்றால் இணங்கவில்லை
அன்னையின் கடுமையான தவத்தை கண்டு இறக்கம் கொண்டே காமாட்சியை அவர் ஏற்றுக்கொண்டார்

அதன்பிறகே சிவனாரின் விரக்தி மாறி பரிபூரணம் உடையவராகி மீண்டும் ஒளிசரீரம்
பெற்று வைரவன் ஆனார் ; அதிதேவர் ருத்ரனாக பரலோகம் ஏகினார்

வைரவன் பரத்திற்கு ஏறியதால் பரமேஸ்வரன் எனப்பட்டார்
சிவனுக்கு இதமும் ஆக்கமும் கொடுத்தவள் அன்னை
அதனால்தான்
மங்கலரூபினி மதியளிசூலினி மன்மதபாணியலே
சங்கடம் நீக்க சடுதியில் வந்திடும் செளந்தரி சுந்தரியே என்கிறார்கள்


அந்த நன்றிக்கடனாக வைரவனாக பரிசுத்த தேகம் அடைந்த பிறகு வைரவன் தன்னில்
ஒரு வியாபகமாக லஷ்மியை வெளிப்படுத்தி திருமாலுக்கு அளித்தார்

சில ஆதிகோவில்களில் வைரவனுக்கு அருகில் லஷ்மிக்கு சந்நிதி இருக்கும் ரகசியம் அவள் சிவனின் வியாபகம் என்பதாகும்
ஆகவே லஷ்மி தன் அண்ணியை துதிப்பாள்
மென்மையான குங்குமத்தில் தோய்ந்துள்ள மங்கலரூபினியே
மரணம் வந்ததால் என் ஆத்மா நிதானமாக அச்சமற்றுத்தான் உள்ளது ஆனாலும் என் உடல் விதிர்விதிக்கிறது
நீயே எனக்கு துணை
துணை தொழும் தெய்வம் பெற்ற தாய்
வேதங்களின் வெளிச்சத்தை அவ்வப்போது சுருதிகளாக சடங்குகளாக ஒவ்வொரு ஞானிகளும் வடிவமைப்பார்கள்
அந்த சுருதிகள் முடிவானவையல்ல
அது ஒரு கருவி உயவு
காலத்துக்கு காலம் தொழில்நுட்பங்கள் அப்டேட் ஆவதுபோல
வேதம் அடிப்படையான விஞஞான தத்துவம் போல
அவைகளைக்கொண்டு உருவாக்கப்படும் சுருதி தொழில்நுட்பம்
புது புது வெர்சனாக அப்டேட் ஆகவேண்டும்
அதற்கென்று சிலநபர்கள் வருவார்கள்

90 சதவிகிதம் பேர் சடங்கு சம்பிரதாயங்களை காப்பாதே குறியாக இருப்பார்கள் .
அதில் காலத்துக்கு ஒவ்வாதவைகளை களைந்து புதியன அடிப்படைகளை மாற்றாமல்
புகுத்தவேண்டும்

அதற்கென்றே யுகயுகமாக சில ஆத்மாக்களை இறைவன் பூமிக்கு அனுப்பிக்கொண்டே இருப்பார்

2:106. ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால்
அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம்.

சுருதிகளால் விளைய வேண்டிய பலன்களை அதிகரிக்கும் புதிய சம்பிரதாயங்களை இறைதூதர்கள் கொண்டுவருவார்கள்
எல்லா அதிதேவர்களின் அத்தாட்சி பெற்ற இறைதுதர்களும் பூமிக்கு வந்துசென்றனர்
அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் தரப்பு வேதங்களை கொண்டுவந்தாலும் ஒன்றுக்கு ஒன்று மாறுபாடுபோல மதபேதங்களும் வந்துவிட்டன
சகல அதிதேவர்கலோடும் நல்லினக்கமுள்ள ஒரே அதிதேவர் அன்னையின் அத்தாட்சியோடு வர உள்ள நபரோ சகல வேதங்களையும் சமரசப்படுத்துவார்
கலியுக முடிவு அன்னையால் தலைமை தாங்கி நடத்தப்படும்
அது அழிவு அல்ல ; சகலரையும் நல்லினக்கப்படுத்தும் சமரச வேதம்
சுருதிகள் நிலைத்திருக்கும் வேர் போன்ற சகல வேதங்களும் கொழுந்துகளும் கனிகளும் அன்னையிடம் குடிகொண்டுள்ளன
அன்னையின் ஆயுதங்கள் அழிப்பவை அல்ல ; இனைப்பவை பனிமலர் போன்ற கணைகள்
நெஞ்மையான பாசக்கயிறால் கட்டி நல்வழிப்படுத்தும் அங்குசம் உடைய திரிபுர சுந்தரி ராஜராஜேஸ்வரி என்பதை அறிந்தோம் என்கிறான் பக்தன்
வரப்போகிற சமரசவேதம் என்ற மறையை அன்னையின் திருவடியில் மனதை குவித்து அறிந்துகொண்டேன்
உன்னால் வரப்போகிற சமரச வேதாந்தியை வள்ளலார் முதலான பலரும் முன்னரிவித்துள்ளனர்

அதை ஏற்றுக்கொள்ளாத மததுவேசிகளை ; இறைவனுக்காக என மததுவேசம் செய்து
நரகத்துக்கு செல்லும் கருமிகளை நான் நிச்சயமாக ஒதுக்கியே வைப்பேன்

மனிதர்களும் தேவர்களும் முத்தர்களும் சித்தர்களும் தலை தாழ்த்தி வணங்கும் கோமளமே

கொன்றை மலர்களால் நிரம்பிய சடையில்பிறையையும் நாகதேவியையும் கங்கையும்
அணிந்துள்ள புனிதரான சிவனும் நீரும் எப்போதும் என் சிந்தையில்
இருப்பீர்களாக


No comments:

Post a Comment

Abirami Anthathi 1 - 4

தார் தாரகா பூக்கும் கொன்றை மலர்களையும் சண்பக மலர்களால் ஆன மாலைகளையும் விரும்பி அணியும் தில்லை ஊரார் சிவனின் இடபாகத்தை கைப்பற்றிக்க...