Total Pageviews

Sunday, 18 August 2019

Abirami Anthathi 26 - 30



ஈரேழு பதிநாலு லோகங்களையும் படைத்தும் காத்தும் அழித்தும் வருகிறவர் இறைவன் ஆகும்
அவரை இடைவிடாது தியானிக்கிறவர் (ஏத்தும் அடியவர்)அதிதேவர் சிவனாகும்
அத்தகைய சிவனே மணம் கமழ்கிற பூக்களை அன்னையின் குழலுக்கு சாத்தி மகிழ்வாராம்

அதனால் உன் திருவடித்தாமரை எப்போதும் நறுமணத்தால் கமழ்கின்றது . அதை
அழுக்குள்ள என் நாவால் புகழாரம் சூட்ட முயற்சிப்பது நகைப்புக்கு உரியது
அன்றோ

உன் மீது உருகும் அன்பை என் உள்ளத்தில் வைத்தவள் நீயே
அதனால் என் நெஞ்சத்து அழுக்குகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றன . அங்கு அருட்புனல் நிரம்பி வருகிறது
அந்த அருளால் உனது பத்ம பாதகமலங்களுக்கு துதிகளை சமர்பிக்கிறேன்
வஞ்சகம் நிறைந்த பிறவித்தளையை உடைத்து விடுதலை கொடுப்பாயாக
சொல்லும் பொருளும் இயைந்து நடமாடுவது சிவன் ஒருவரால் மட்டுமே முடியும் . மற்ற கலைஞர்கள் ஏதாவது ஒன்றை கோட்டை விட்டுவிடுவார்கள்

சலிப்பே இல்லாமல் சிவனால் நடனமாட முடிவதற்கு காரணம் அவரின் ஜீவனோடு
இணைந்து பேரானந்தத்தை உற்பவிக்க செய்வது அன்னை – மங்காத பரிமளத்தால் அவரை
புல்லுகிறாலாம் பூங்கொடி ஆனவள்

அவளின் பாதகமலங்களை இரவும் பகலும் தொழுபவர்கள் நிச்சயமாக சகல மேன்மைகளையும் அடைவார்கள்
மனித பிறவி எடுக்காமல் தவம் செய்ய முடியாது . தவம் செய்து முக்திகள் ஒவ்வொன்றாக பெற்றால் இறுதியில் முடிவான சித்தி சித்திக்கும்
அதற்கு சக்தி கொடுப்பவள் அன்னையே ஆகும்

அதுமட்டுமல்ல புத்தி பக்குவப்படவேண்டும் என்றால் அதை கெடுக்கிற அஹம்பாவம்
சுய பெருமையை அழித்து நிர்விகழ்பத்தை அவளால் மட்டுமே அருள முடியும்

அவள் யாரை அழித்தாள் ?
மகிமை சுய பெருமை பேசி மனதை கேட்டில் தள்ளும் மகிஷா அசுரனைத்தானே அழித்தாள்
ரெம்ப நல்லதாக ஆகிவிட்டது
உன்னை நான் கண்டுகொண்டதும் ; சரணடைந்ததும்
என்னை கரையேற்றுவது உனது திருவுள சித்தமாக இருப்பது

No comments:

Post a Comment

Abirami Anthathi 1 - 4

தார் தாரகா பூக்கும் கொன்றை மலர்களையும் சண்பக மலர்களால் ஆன மாலைகளையும் விரும்பி அணியும் தில்லை ஊரார் சிவனின் இடபாகத்தை கைப்பற்றிக்க...