Total Pageviews

Sunday, 18 August 2019

Abirami Anthathi 21- 25





மங்கலமானவள் ; தன் பிள்ளைகளுக்கு அமுது கொடுத்து கொடுத்து சிவந்த ஸ்தனங்களை உடையவள் ; ஞானிகளின் சகஸ்ரத்தில் உதிப்பவள் ; கொண்டல்காற்றின் இனிய சத்தம் போன்ற குரலுடையவள் ; தன் பக்தர்களுக்கு வாரி வாரி கொடுத்து சிவந்த கரங்களை உடையவள் ; தாவி ஓடுகிற கங்கையை சடையில் அணிந்துள்ள சிவனாரின் அன்புக்கு பாத்திரமானவள் ; யோகசித்திகளில் வாசியானவள் ; நீல நிறமுடையவள் ; தண்ணீர் நிறைந்த கழனியைப்போன்றவள் ; பசுமையான பெண் கொடியானவள் நீயேயாகும்

மல்லிகொடிகள் மரத்தை பற்றிப்படர்ந்து ஏறி பூக்களால் அலங்கரிக்கும் . அத்தகைய மலையில் உள்ள அர்ச்சுனர் கோவிலை மல்லிகார்ச்சுன மலை என்பார்கள்

சிவனுக்கு எப்படி நாகதேவியானவர் விசத்தை அமிர்தமாக மாற்றி கொடுக்கிறாரோ அதைப்போல அர்ச்சுனரை தேடிவந்து அவரை மரணத்திலிருந்து விடுவித்தவர் சப்தகன்னியரில் ஒருவரான உலூபி .

சிவனுக்கு நாகதேவி ஞானம் யோகசித்திகளின் அடையாளம் என்றால் சிவனின் அம்சமுள்ள அர்ச்சுனருக்கு நாககன்னி அடையாளமாகும் . அக்கா மஹாதேவியாக அவதரித்தபோது தன் உள்ளமெல்லாம் நிறைந்த அர்ச்சுனரை சென்ன மல்லிகார்ச்சுனா என பாடிபாடி துதித்தார்

ஆதிசேஷரே ஞானத்தின் அதிதேவராவர் . அவராலேயே உயிர்ப்பிக்கவும் முடியும் . சிவன் உண்ட விசத்தை அமிர்தமாக மாற்றி அவருக்கு மரணமில்லா பெருவாழ்வு கொடுத்தவள் ஆதிசேஷரின் அம்சமான வாசுகியே ஆகும் . அதைப்போல கொல்லப்பட்ட அர்ச்சுனரை உயிர்பித்தவள் நாககன்னி மல்லிகாவே ஆகும் .

பக்தன் துதிக்கிறான் :

சகல வேதங்களை சமரசப்படுத்தி இதமாக்கும் பரிமளமே
பனிபடர்ந்த இமயத்தைப்போல மகிழ்சியை கொடுப்பவளே
பிரம்மா முதலான தேவர்களின் சக்தியாக இருப்பவளே
எனக்கு வந்த வம்பால் மரணம் காத்து இருக்கிறது

சிவனாரையும் அர்ச்சுனரையும் மரணத்திலிருந்து காத்தது போல என்னையும் காப்பாயாக

நின் கோலம் அல்லாது வேறொன்றும் என் மனதில் நிற்காது
நின் அடியவர் திருக்கூட்டத்தை குறை கூறேன்

மிக எளிதாக யாருக்கும் அவரவர் தரத்திற்கு இறங்கிவந்து உறவாடுபவள் அன்னையே ஆகும் . மற்ற அதிதேவர்களைப்போல தராதரம் விரும்பமாட்டாள் ; ஏனென்றால் இவளே புவனேஸ்வரியுமாவாள் . கலியுகத்தால் உலகம் அழியாதபடி தாய்மையால் அவர்களையும் காத்துவருபவள்

மற்ற மூன்று அதிதேவர்களும் வேறுவேறு போல தெரியும் வேதங்களை பூமிக்கு அருளுகின்றனர் . அதனால் மத துவேசங்கள் கூட வருகின்றன . ஆனால் மூவரின் அன்புக்கு பாத்திரமாகி அவர்களோடு உறவை காத்துக்கொள்ளும் நீயோ உலகுக்கே அருமருந்தாக இருக்கிறாய்

சகலவற்றிக்கும் வெளியேயும் உள்ளேயும் ஊடுருவி நின்று உள்ளத்திற்குள் சாந்தியையும் சமாதானத்தையும் அருளுகிராய் . இறைபேரானந்தம் உண்டாவதால் அண்ணாக்கில் அமிர்தம் ஊறுகிறது

அமிர்தம் ஊறுமிடம் மணியாகும் . சகஸ்ரத்திற்கு கீழே ஆக்கினைக்கு உள்ளே ஒரு சவ்வு மணியைப்போல உள்ளது . அதற்கு மஞ்சள் நிறத்தில் ஒரு நரம்பும் வெள்ளை நிறத்தில் ஒரு நரம்புமாக ஏறவும் இறங்கவும் இருக்கிறது . இதில் உயிரை ஏற்றி அந்த பெட்டகத்தை திறந்து பூட்டிவிட்டால் அதுவே ஜீவசமாதி . உடல் உண்பதையும் கழிவையும் நிறுத்தி விடும் . சகல செயல்பாடுகளும் ஒடுங்கிவிடும் . ஆனால் அழுகாது

அந்த மணியில் உயிர் நின்று ஒளியாக துலங்கும் . தம்மை அண்டிவந்தோரின் உயிராற்றலையும் உயர்த்திவிடும்

அத்தகைய ஞானிகளை அணியாக அணிந்துள்ளவள் அன்னை . அணிகலன்களுக்கு அணியானவள் .

உன்னை அனுகாதவர்கள் பிணிக்கு ஆளாகிறார்கள் . உலகின் பிணிகளுக்கும் மருந்தாக இருக்கிறாய் ; தேவர்களுக்கு அமிர்தமாகவும் இருக்கிறாய்

உன் பத்மபாதத்தை பணிந்துகொண்டாள் ; சகல தேவர்களும் அருள்புரிவார்கள்

உன்னையும் உன் அடியவர்களையும் பேணினால் மரணமில்லா பெருவாழ்வின் ரகசியத்தை உணர்ந்துகொள்ளலாம் . ஆகவே உன்னையே போற்றித்துதிப்பேன்

No comments:

Post a Comment

Abirami Anthathi 1 - 4

தார் தாரகா பூக்கும் கொன்றை மலர்களையும் சண்பக மலர்களால் ஆன மாலைகளையும் விரும்பி அணியும் தில்லை ஊரார் சிவனின் இடபாகத்தை கைப்பற்றிக்க...