Total Pageviews

Sunday, 18 August 2019

Abirami Anthathi 15 - 20



உன் வடிவே அதிசயம் . அவரவர் தரத்திற்கு உன்னைப்பற்றி கொஞ்சம் அறிகிறார்கள்
அறிய அறிய புதிய புதிய கோணத்தில் அறிவில் ஞானத்தில் பல வெளிப்பாடுகளை தந்துகொண்டிருக்கிராய்
ஈரேழு லோகங்களிலும் உன்னை துதிக்கிரவர்களால் நிரம்பிய சுந்தரவல்லி நீயே
சிவனாரை தனியே தரிசித்துக்கொண்டிருக்கிரவர்களுக்கு அசுர ஆவிகளால் பலவகையான தொந்தரவுகள் இடறல்கள் வந்துகொண்டே இருக்கும்

அசுரர்களின் தலைவரான கருப்புசாமியின் அன்புத்தங்கையான அன்னையை சிவனாரின்
துணைவியாக இருவரையும் சேர்ந்து தரிசிப்பவர்களுக்கோ அசுர ஆவிகள் தொந்தரவுகள்
செய்யாது ஒதுங்கி செல்லும்

பிரதோசத்தன்று அம்மைஅப்பனாக சேர்த்து சப்பரத்தில் சுற்றுவதன் ரகசியம் இதுதான் தோஷங்கள் நீங்கும்
வெள்ளிக்கிழமை அன்று பள்ளியறை பூஜை பார்த்தால் பல தோஷங்கள் நீங்குவதன் ரகசியமும் இதுதான்
தேவர்கள் அனைவரும் நாராயனனிளிருந்து வியாபித்தவர்கள் தானே
அதுபோல தேவர்களில் சிலர் அசுரர்களாக மாறினார்களே அவர்களும் நாராயனனிளிருந்து வந்தவர்கள்தானே
நல்ல நாராயணன் தேவர்கள் என்றால் கெட்ட நாராயணன் அசுரர்கள் ஆகும்
பரத்திலே இந்த ரெண்டு குருப்புக்கும் உண்டாகிற முரண்பாடுகளே பூமியிலும் மனிதர்களில் பிரதிபலிக்கிறது
சிவனோடு அன்னையை சேர்த்து தரிசிக்கிரவர்களிடத்து ரெண்டு அண்ணன்மார்களும் பாதிப்பை உண்டாக்குவதில்லை

அசுர ஆவிகளால் மனக்குழப்பங்களில் மாயைகளில் பீடிக்கப்படாமல் மனிதர்களை
காப்பதற்காகவே அன்னை தட்சினாமூர்த்தியில் இடப்புற தோளை கவ்விப்பிடித்தவளாக
சுருட்டப்பளியில் காட்சியளிப்பாள்

முதன்முதலாக பிரதோஷ வழிபாடு துவங்கிய சேத்திரம் சுருட்டப்பள்ளி
அங்கு தட்சினாமுர்த்தியை கெளரி என்ற பெயரில் பின்புறம் இருந்து இடபக்க தோளை கைகளால் தழுவிப்பிடித்தவளாக அன்னை காட்சியளிப்பாள்
குரு குரு பத்தினியாக சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்வதாக அந்த சிற்பம் இருக்கும்
வாம பாகத்தை வவ்விக்கொண்டிருக்கும் நீயும் உன் துணைவனாரும் மகிழ்ந்திருக்கும் சிறந்த உங்கள் திருமணக்கோலம் என் சிந்தையுள்ளே
அதனால் என்னை பிடித்த பாவசாபங்கள் மாயைகள் அனைத்தையும் தீர்த்துவைக்கிரவளாக நீ இருக்கிறாய்
எனக்கு குருவாக வந்து ஆட்சி செய்கிற உன் பொற்பாதங்களை நான் சரணடைந்தவனாக இருக்கிறேன்
என் பாவசாபங்களால் தாவிப்பிடிக்க வருகிற எமதர்மன் வரும்போது குறுக்கே நிற்கிரவளாகவும் நீயே இருக்கிறாய்
கேடுகள் வரும்போது குறுக்கே நிற்கிற உன்னை பார்த்து என் விழியும் நெஞ்சும் கண்ணீரால் நனைவது அளவானதல்ல

என்னை நான் உணர்ந்து ஒவ்வொரு பாவமாக கடறுவதுவதற்கு என் ஆத்துமாவில் உள்ள
முடிச்சுகளை அவிழ்த்து நான் தெளிவதற்கு ஞானமடைவதற்கு உன் வழிகாட்டுதல்களே
காரணம்

ஒளியானது முக்கோணகண்ணாடியால் ஒன்பதாக சிதறடிக்கப்படுகிறதே ;
அப்படி ஆத்மாவை பகுத்துணர்ந்து தோண்ட தோண்ட வரும் பூதங்களான முன்னை
வினையின் முடிச்சுகளை அவிழ்க்கிறாய்

விக்ஞானம் விப்ஜியார் என ஒளி
ஏழு வண்ணமாக பிரிகிறதாக ஆரம்பத்தில் சொல்லிற்று . அதற்கு முன்பே மெய்ஞானி
ஒன்பதாக பிரிகிறது என இப்பாடலில் சொன்னார் . அதை இப்போது அல்ட்ரா வயலட்
அல்ட்ரா ரெட் என இரண்டு ஒளிகற்றைகள் ஆகமொத்தம் ஒன்பது என
கண்டுபிடித்திருக்கிறார்கள்

அருள்நிலையில் நிரம்பி வரும் வார்த்தைகள் மனித அறிவால் வர்வதல்ல .
அவைகள் உன்னதத்திலிருந்து வரும் உண்மைகள்
அவற்றை நாம் உணர்ந்துகொள்ள முயலவேண்டும்
அப்படித்தான் அடுத்த பாடலில் மிகமுக்கியமான உண்மை ஒன்று வெளியாகியுள்ளது
உன் ஆற்றல் உறைகின்ற உனது கோவில்களில் நிரம்பி வழிகிற உன் அடியவர்கள் ஒரு பக்கம் உன்னை துதித்துக்கொண்டே இருக்கிறார்கள்

இதுவரை வெளியாக்கப்பட்ட வேதங்களின் அடிப்படை உண்மைகளாகவும் முடிவான
உண்மைகளாகவும் ; மேற்போக்காக இந்த வேதங்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக
விசத்தை கொட்டுவதுபோல இருந்தாலும் வரப்போகிற சமரசவேதம் என்ற அமுதத்தால்
அவைகளை இதம் நிரம்பியவைகளாக நீ மற்றப்போகிறாய்

ஆனாலும் மனிதர்களாகிய நாங்களோ குறுகிய மனத்தால் எங்களை நாங்களே ஏமாற்றிக்கொள்கிறோம்
பூரணமான அண்ணாமலையில் விளங்கும் தத்துவத்தை உலகிற்கு கொடுத்த மங்கலருபினி நீயல்லவா
அது ஏதென்றால் அண்ணாமலையில் கிரிவலம் என்ற வழிபாட்டை முதல் முதலில் துவக்கியவள் அன்னையே ஆகும்
அந்த வரலாறில் உண்மை வெளியாக்கப்பட்டுள்ளது ; அந்தோ ஆனாலும் குறுகிய மனம் படைத்தோர் தவறாகவே விளக்கம் கற்பித்து வருகிறார்கள்

அன்னையானவள் கோவிலில் இறைவனை காண 14 ஆண்டுகள் தவமிருந்தாள் . அப்படி
தவமிருந்தும் காணமுடியவில்லை . அப்போது கார்த்திகை பெளர்ணமியன்று மலையை
சுற்றி வரும்போது மலைக்கு நேர் மேற்கே அன்னை வரும்போது மலை உச்சியில்
அருட்பெரும்ஜோதி தரிசனம் அன்னைக்கு சித்தித்தது

இந்த நிகழ்வே கிரிவலமாக மாறியது
வரலாறை எல்லோரும் ஒத்துக்கொள்வார்கள்
ஆனால் தவறாக விளக்கமளிக்கிறார்கள்

அன்னை சிவனை காண தவமிருந்தாள் ; காண முடியவில்லை . கிரிவலம் வந்து மலை
உச்சியில் சிவனை ஜோதியாக கண்டாள் என தங்களின் குறை அறிவால் விளக்கம்
கொடுக்கிறார்கள்

சிவனின் மனைவியானவள் சிவனை காணமலா இருப்பாள் . சிவனை நிச்சயமாக தினமும் கண்டவள் அவள்
ஆக அவள் கண்ட சிவனை காண தவம் செய்யவேண்டிய அவசியமில்லை

அவள் காணாத ஒருவரை சிவனை விட பெரியவரான இறைவனை ; உலகின் ஞானிகளும் மாற்று
மதங்களும் அருவ இறைவன் என சொல்லுகிறதே அந்த இறைவனை காணவே அவள் தவம்
இருந்திருக்கவேண்டும்

அந்த இறைவனைத்தான் அவள் அருட்பெரும்ஜோதியாக மலை உச்சியில் தரிசித்தாள்
கார்த்திகை தீபமாக அருட்பெரும்ஜோதியாரே அடையாளப்படுத்தப்படுகிறார்

சிதம்பரத்தில் ஜோதியாக மாறும்முன்பு மாணிக்கவாசகரும் மார்கழி மாதம் முதல்
நாள் அதிகாலையில் அடிஅன்னமாலை என்ற இடத்திற்கு வந்துசேறுகிறார்

அவருக்கும் அருட்பெரும்ஜோதி தரிசனம் கிடைக்கிறது
உடனே ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும்ஜோதியை என திருவெம்பாவை பாடத்தொடங்குகிறார்

முழுமை அடைந்தவர்கள் அனைவரும் இறைவன் அருட்பெரும்ஜோதியானவர் சிவனை விட
பெரியவர் என வள்ளலார் போல சொல்லும்போது அரைகுறைகள் அந்த ஜோதியும் சிவன்தான்
என மாய்மால விளக்கம் கொடுத்துக்கொண்டுதான் உள்ளனர்

மாயங்களை கடந்த பூரணமான அருணாசல மங்கை நீ என்கிறான் பக்தன்


No comments:

Post a Comment

Abirami Anthathi 1 - 4

தார் தாரகா பூக்கும் கொன்றை மலர்களையும் சண்பக மலர்களால் ஆன மாலைகளையும் விரும்பி அணியும் தில்லை ஊரார் சிவனின் இடபாகத்தை கைப்பற்றிக்க...