பக்தன் தன் அன்னையின் மீது லயித்து விட்டானானால் அவளின் அழகு அவனுக்கு பெருமையாக தெரிய ஆரம்பித்து விடுகிறது
சமயத்தில் அவளும் ரம்மியத்திற்குள் அவனை ஆழ்த்தி மனதை இதமடைய செய்வாள்
இறை பேரானந்தம் என்று சொல்வார்களே அந்த பரமானந்தம் நிர்விகழ்பமானது
அதை சிறிதேனும் அனுபவித்தவர்க்கு அதற்கான சலிப்பிலாத சாதகம் செய்யத்தோன்றும்
பரமானந்த சாகரம்
அதில் பல நிலைகள் உள்ளன
அவற்றில் ஒன்று அன்னையின் அழகில் லயித்திருப்பது
மோகனம் என்பது மோகத்தில் காமத்தை நீக்கிவிட்டால் வரும் நிலை
காமம் அற்ற மோகம் மோகனம்
செளந்திர்ய லகரி
ஆதிசங்கரர் சுத்த சந்நியாசி
அதுவும் பாலவயதிலேயே சந்நியாசம்
ஒரு பத்து வருடத்திற்குள் இந்தியா முழுதும் கால்நடையாகவே அலைந்து பல சாதனை செய்தவருக்கு நேரம் ஏது
அவரையும் அன்னை தன மோகனத்தில் வீழ்த்தி அவர் வாயாலும் தன் செளந்திர்யத்தை பாட செய்து ரசித்து கேட்டாள்
அதுபோன்ற ஒரு நிலையில் பயித்தியம் போல தியானத்தில் ஆழ்ந்து மோகனத்தில் மூழ்கி கிடந்தவர் அபிராமி பட்டரும்
அம்மாவாசையை பெளர்ணமி என சொல்லியாயிற்று ; நிலவு வராவிட்டால் மரண தண்டனை நிச்சயம்
தப்பி ஓடவா செய்தான் பக்தன்
அவன் சரணாகதி அடைந்து எவளின் மோகனத்தில் லயித்து பரமானந்தம் அடிந்திருந்தானோ அவளையே அவன் பற்றிக்கொண்டான்
மரணபயம் என்பது கிஞ்சித்தும் இல்லை
அந்தாதி என்பது மிகவும் சிக்கலான இலக்கணம் உடையது
முடித்த அடியையே முதலடியாக எடுக்கவேண்டும்
அதில் பொருள் கோர்வையும் வேண்டும்
சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
புள்ளும் பரிமள பூங்கொடியே
என ஒரு இடத்தில் வருணனை கூட உண்டு
புள்ளுதல் என்ற வார்த்தை கோதை அக்கா வும் பயன்படுத்திள்ளார்
புள்ளும் சிலம்பினகால்
குழந்தைக்கு சிலம்பை கொலுசை மாட்டிவிட்டு அது தட்டுத்தடுமாறி ஓடி அந்த சத்தத்தை கேட்டு பேரானந்தம் அடைவார்கள்
இதயத்தின் அடி ஆழம் வரை மகிழ்ச்சியை நிரப்புவது புள்ளும் சிலம்பு
சொற்சுவை பொருள் சுவையோடு நாட்டியம் ஆடும் சிவனாரோடு ஒத்திசைந்து பின்னிப்பிணைந்து பரிமளத்தை அள்ளிக்கொடுப்பவள் இவள்
அந்த அழகில் லயித்து பரமானந்த சாகரத்தில் திலைக்கவைத்தவள் என்னை காக்காமல் விடுவாளா என்ன
அதனால் அவன் சொல்கிறான் எனக்கு துணையாக உன் அழகையே எழுதிவைத்தேன்
கண்ணழகு கண்ணழகு என காதல்வாந்தி கலைஞர்களும் பாடாத இடமில்லை
கண்ணகி கண்ணாத்தாள்
சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடி
பாரதி கொண்டாடிய அதே அர்த்தத்தில் இந்த பக்தனும் சொல்கிறான்
விழியின் கொழுங்கடையும்,
துப்பும், நிலவும் எழுதிவைத்தேன், என் துணை விழிக்கே.
அபிராம வல்லியின் விழிகே அருளுண்டு என்கிறான்
கடைக்கண்ணால் அவள் ஒரே ஒரு பார்வை பார்த்தால் போதாதா
கருணை ஈகை அருள்பாலிப்பு
அவளின் அருள்பாலிப்பாள் வேதங்கள் உணர்ந்து அதன் வழி வாழும் இதயம் வந்துவிடும்
சகல செளபாக்கியங்களும் தேடி வரும்
அப்படியிருக்க உலக வாழ்க்கை உலக வாழ்க்கை என பழிக்கே உழலும் மனிதர்களின் தயவு எனக்கு அவசியமில்லை
தனித்திரு விழித்திரு என்பது இறைவனோடும் இறைவனது பரமண்டல சக்திகளோடு கூட்டை உறவை நிலைநாட்டிக்கொண்டவர்க்கு மட்டுமே வருவது
அவனுக்கு ஒத்தாசை பரத்திளிருந்தே வரும்
உலகம் வேண்டுமானால் அவனை கண்டுணர்ந்து அவன் பின்னால் ஓடினால் பயனடையும்
அவனுக்கு உலகம் அவசியமில்லை
தன் அடியாரிடம் கூறி அவளே கூட்டத்தையும் உண்டாக்கித்தருவாள்
கொடிய வினைகளையும் களைந்து பிறவித்தளையையும் அறுத்தெறிவாள்
கண்ணால் காணும் பாக்கியத்தை அருளுவாள்
தன்னை உள்ளது உள்ளவாறு தெளிவாக அறியத்தருவாள்
சப்த மாதர்கள் வேறு சப்த கன்னியர் வேறு என்பதை 50 வயது கடந்துதான் அறிந்தேன்
கெளரி சப்தமாதர்களின் தலைவி என்றால் காளி சப்தகண்ணியரின் தலைவி
அபிராமி காமாட்சி மீனாட்சி என்பவர்களெல்லாம் காளியே என்பதை சிலமாதங்கள் முன்புதான் உணர்ந்தேன்
அகோரமான காளியே மகா சிருங்காரியாகவும் ஆரணங்காகவும் மாறி சிவனை மயக்கி
அடக்கி வைத்து கலியுக வாழ்வும் நடக்கும்படியாக அருளாட்சி செய்து வருகிறாள்
மாத்தவள்
மாத்தவள் என்பதைப்பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்
உலகின் சொப்பன சுந்தரிகள் யார் இருந்தாலும் அவர்கள் அன்னையின் பரிவாரங்கள் ஆகும்
வேலைக்காரிகள் ஆகும்
எஜமானியே எனக்கு வேண்டியவாளன பிறகு இந்த வேலைகாரிகளை நான் என்ன மதிப்பது
ஆ ஆ அழகு என ஆராதிப்பது
மாசு மருவில்லாத அழகு என்றால் அன்னை ஒருத்தி மட்டுமே
மற்றெல்லா அணங்குகளிடமும் நிச்சயமாக ஒரு சின்ன சொள்ளை இருக்கும்
ஆனால் நிறைவான அழகு அடக்கமாக பரிமளிக்கும் . தாய்மையே வடிவான அத்தகு பெண்கள் உன் அருள் பெற்றவர்கள்
குறைகளோ கூத்தாடும்
அலப்பறை செய்யும்
அந்த அலப்பறை ஒரு மாயை வஞ்சகம்
அதற்கு நான் இணங்கேன்
அவர்களால் பாதிக்கப்படாத இயல்பு ; என் கண்கள் உன்னை தரிசித்ததால் உண்டானது
சமயத்தில் அவளும் ரம்மியத்திற்குள் அவனை ஆழ்த்தி மனதை இதமடைய செய்வாள்
இறை பேரானந்தம் என்று சொல்வார்களே அந்த பரமானந்தம் நிர்விகழ்பமானது
அதை சிறிதேனும் அனுபவித்தவர்க்கு அதற்கான சலிப்பிலாத சாதகம் செய்யத்தோன்றும்
பரமானந்த சாகரம்
அதில் பல நிலைகள் உள்ளன
அவற்றில் ஒன்று அன்னையின் அழகில் லயித்திருப்பது
மோகனம் என்பது மோகத்தில் காமத்தை நீக்கிவிட்டால் வரும் நிலை
காமம் அற்ற மோகம் மோகனம்
செளந்திர்ய லகரி
ஆதிசங்கரர் சுத்த சந்நியாசி
அதுவும் பாலவயதிலேயே சந்நியாசம்
ஒரு பத்து வருடத்திற்குள் இந்தியா முழுதும் கால்நடையாகவே அலைந்து பல சாதனை செய்தவருக்கு நேரம் ஏது
அவரையும் அன்னை தன மோகனத்தில் வீழ்த்தி அவர் வாயாலும் தன் செளந்திர்யத்தை பாட செய்து ரசித்து கேட்டாள்
அதுபோன்ற ஒரு நிலையில் பயித்தியம் போல தியானத்தில் ஆழ்ந்து மோகனத்தில் மூழ்கி கிடந்தவர் அபிராமி பட்டரும்
அம்மாவாசையை பெளர்ணமி என சொல்லியாயிற்று ; நிலவு வராவிட்டால் மரண தண்டனை நிச்சயம்
தப்பி ஓடவா செய்தான் பக்தன்
அவன் சரணாகதி அடைந்து எவளின் மோகனத்தில் லயித்து பரமானந்தம் அடிந்திருந்தானோ அவளையே அவன் பற்றிக்கொண்டான்
மரணபயம் என்பது கிஞ்சித்தும் இல்லை
அந்தாதி என்பது மிகவும் சிக்கலான இலக்கணம் உடையது
முடித்த அடியையே முதலடியாக எடுக்கவேண்டும்
அதில் பொருள் கோர்வையும் வேண்டும்
சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
புள்ளும் பரிமள பூங்கொடியே
என ஒரு இடத்தில் வருணனை கூட உண்டு
புள்ளுதல் என்ற வார்த்தை கோதை அக்கா வும் பயன்படுத்திள்ளார்
புள்ளும் சிலம்பினகால்
குழந்தைக்கு சிலம்பை கொலுசை மாட்டிவிட்டு அது தட்டுத்தடுமாறி ஓடி அந்த சத்தத்தை கேட்டு பேரானந்தம் அடைவார்கள்
இதயத்தின் அடி ஆழம் வரை மகிழ்ச்சியை நிரப்புவது புள்ளும் சிலம்பு
சொற்சுவை பொருள் சுவையோடு நாட்டியம் ஆடும் சிவனாரோடு ஒத்திசைந்து பின்னிப்பிணைந்து பரிமளத்தை அள்ளிக்கொடுப்பவள் இவள்
அந்த அழகில் லயித்து பரமானந்த சாகரத்தில் திலைக்கவைத்தவள் என்னை காக்காமல் விடுவாளா என்ன
அதனால் அவன் சொல்கிறான் எனக்கு துணையாக உன் அழகையே எழுதிவைத்தேன்
கண்ணழகு கண்ணழகு என காதல்வாந்தி கலைஞர்களும் பாடாத இடமில்லை
கண்ணகி கண்ணாத்தாள்
சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடி
பாரதி கொண்டாடிய அதே அர்த்தத்தில் இந்த பக்தனும் சொல்கிறான்
விழியின் கொழுங்கடையும்,
துப்பும், நிலவும் எழுதிவைத்தேன், என் துணை விழிக்கே.
அபிராம வல்லியின் விழிகே அருளுண்டு என்கிறான்
கடைக்கண்ணால் அவள் ஒரே ஒரு பார்வை பார்த்தால் போதாதா
கருணை ஈகை அருள்பாலிப்பு
அவளின் அருள்பாலிப்பாள் வேதங்கள் உணர்ந்து அதன் வழி வாழும் இதயம் வந்துவிடும்
சகல செளபாக்கியங்களும் தேடி வரும்
அப்படியிருக்க உலக வாழ்க்கை உலக வாழ்க்கை என பழிக்கே உழலும் மனிதர்களின் தயவு எனக்கு அவசியமில்லை
தனித்திரு விழித்திரு என்பது இறைவனோடும் இறைவனது பரமண்டல சக்திகளோடு கூட்டை உறவை நிலைநாட்டிக்கொண்டவர்க்கு மட்டுமே வருவது
அவனுக்கு ஒத்தாசை பரத்திளிருந்தே வரும்
உலகம் வேண்டுமானால் அவனை கண்டுணர்ந்து அவன் பின்னால் ஓடினால் பயனடையும்
அவனுக்கு உலகம் அவசியமில்லை
தன் அடியாரிடம் கூறி அவளே கூட்டத்தையும் உண்டாக்கித்தருவாள்
கொடிய வினைகளையும் களைந்து பிறவித்தளையையும் அறுத்தெறிவாள்
கண்ணால் காணும் பாக்கியத்தை அருளுவாள்
தன்னை உள்ளது உள்ளவாறு தெளிவாக அறியத்தருவாள்
சப்த மாதர்கள் வேறு சப்த கன்னியர் வேறு என்பதை 50 வயது கடந்துதான் அறிந்தேன்
கெளரி சப்தமாதர்களின் தலைவி என்றால் காளி சப்தகண்ணியரின் தலைவி
அபிராமி காமாட்சி மீனாட்சி என்பவர்களெல்லாம் காளியே என்பதை சிலமாதங்கள் முன்புதான் உணர்ந்தேன்
அகோரமான காளியே மகா சிருங்காரியாகவும் ஆரணங்காகவும் மாறி சிவனை மயக்கி
அடக்கி வைத்து கலியுக வாழ்வும் நடக்கும்படியாக அருளாட்சி செய்து வருகிறாள்
மாத்தவள்
மாத்தவள் என்பதைப்பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்
உலகின் சொப்பன சுந்தரிகள் யார் இருந்தாலும் அவர்கள் அன்னையின் பரிவாரங்கள் ஆகும்
வேலைக்காரிகள் ஆகும்
எஜமானியே எனக்கு வேண்டியவாளன பிறகு இந்த வேலைகாரிகளை நான் என்ன மதிப்பது
ஆ ஆ அழகு என ஆராதிப்பது
மாசு மருவில்லாத அழகு என்றால் அன்னை ஒருத்தி மட்டுமே
மற்றெல்லா அணங்குகளிடமும் நிச்சயமாக ஒரு சின்ன சொள்ளை இருக்கும்
ஆனால் நிறைவான அழகு அடக்கமாக பரிமளிக்கும் . தாய்மையே வடிவான அத்தகு பெண்கள் உன் அருள் பெற்றவர்கள்
குறைகளோ கூத்தாடும்
அலப்பறை செய்யும்
அந்த அலப்பறை ஒரு மாயை வஞ்சகம்
அதற்கு நான் இணங்கேன்
அவர்களால் பாதிக்கப்படாத இயல்பு ; என் கண்கள் உன்னை தரிசித்ததால் உண்டானது
No comments:
Post a Comment