Total Pageviews

Saturday, 17 August 2019

Abirami Anthathi 51-57





காசு பணம்தான் நமக்கு பாதுகாப்பு ; கோட்டை போல பலதலைமுறைக்கு சொத்து சேர்க்கவேண்டும் என இறைவனின் அருளை அறியாதவர்கள் நம்புகிறார்கள்

பணத்தாசையே மற்ற ஆசைகளையும் தூண்டி உலகில் பலவகையான கேடுகளை உருவாக்கிவிடுகிறது

அளவுக்குஅதிகமான ஆசைகளை தூண்டுபவை அசுர சக்திகளே ஆகும்

இந்த அசுர சக்திகளால் உண்டாகும் முரண்பாடுகளை அழிக்க சிவனும் நாராயணரும் முயற்சித்த போது நாராயணன் மோஹினியாக வியாபகம் செய்து அவரைப்பார்த்து அசுரர்கள் சிந்தை தடுமாறி நின்ற போது சிவன் அவர்களை அடக்கினார் என்பதாக ஒரு புராணம் உண்டு

மோஹினி அவதாரம் என்பது ஒரு குறிப்பு . அதாவது அதிதேவர் நாராயணன் தன்னில் ஒரு பகுதியை பெண்ணாக வியாபகப்படுத்தினார் .அவரே அதிதேவர் நாராயணி . அவரை சிவனுக்கு மனைவியாகவும் நமக்கு அன்னையாகவும் வழங்கினார்

அசுரர்களை கட்டுப்படுத்த மட்டுமல்ல நமக்கு அன்னையாக இருந்து வழிநடத்தவும் ; சிவன் பெரியவரா நாராயணன் பெரியவரா என மதச்சண்டை போடும் மனிதர்களுக்கு சிவன் கோவில்கள் அனைத்திலும் அன்னையாக நாராயணனின் ஒரு அம்சமே இருக்கிறது என சமரசத்தை உணர்த்தவுமே மோஹினி அவதாரமாகும்

இந்த நாயகியை சரணடைந்தால் மற்ற மூன்று அதிதேவர்களும் தானாகவே நமக்கு அருள்புரிவார்கள்

வையம் வரவுக்கு வழிசெய்வது ; துரகம் அது நல்வழியில் அளவோடு செலவாகவேண்டும் . செலவு குறைந்து மிச்சம் உண்டானால் மாமகுடம் வண்டி வாகனம் ஆபரணங்கள் எல்லாமே நீ நாடி தேடி ஓடவேண்டியதில்லை

நல்ல மதியை அருளும் சிவனாரின் திருமனையாலின் அடித்தாமரையை தியானம் தவம் செய்பவருக்கு தானாகவே வந்து சேரும்

அன்னையின் அழகிய உருவம் மீது லயிக்கும்போது அதுவே தவமாகவும் மாறிவிடுகிறது . மலார்ப்பாதங்கள் துவங்கி முழு உருவமும் மனதில் தங்கிவிடுகிறது

நித்தமும் தியானம் செய்துகொண்டிருந்தால் உலகத்தால் நம் மனதில் வந்து குவியும் மாசு மருக்கள் நீர்த்துபோய்க்கொண்டிருக்கும்

தியானத்தை நிருத்திவிட்டாலோ உலகம் நம்மை ஆழுமை செய்து அருள்வளம் நீர்த்துப்போகும்

பக்தன் சொல்கிறான் நித்தம் தியானம் செய்யாதவர்களிடத்து அன்னை வரமாட்டாளாம் . அவளின் பாதத்தை பிடித்துக்கொண்டாலோ இல்லாமை சொல்லி ஒருவரிடம் உதவி கேட்டு போகும் நிலை வரவே வராதாம்

பக்தன் இயல்பிலேயே கவித்திறன் உடையவன் . அவன் கோவிலும் அன்னையும் கதி என இருந்தானே தவிர தன் கவித்திறமையை அரசனிடம் காட்டி பரிசுகள் பெற முயலவில்லை

ஆனால் அப்படி பலர் இருந்தார்கள் . பசுந்தமிழ் பாமாலைகள் அரசனைப்பற்றி கொஞ்சம் மெய்யும் பொய்யும் இயம்பி பலர் காசு பார்த்துக்கொண்டுதான் இருந்தனர்

ஆனால் பக்தன் சொல்கிறான்

சிவனார் அளக்கிறபடி அண்டத்திற்கே படி அளக்கிறவள் நீயல்லவா

வரவு செலவு என்ற இரண்டு நாழிகளையும் நிர்வகித்து அறம் செய்கிறவள் நீயல்லவா

அப்புறம் எதுக்கு இந்த அரசனைப்பார்க்கனும்

ஆயிரம் மின்னல்கள் ஒரு மேனியானதைப்போல இலங்குகின்றாய் சிவனாரின்மனமகிழ்ச்சியாக இருக்கிறாய் வேதங்களின் துவக்கமும் நடுவும் முடிவுமானவள் ஆனந்தவல்லி உன்னை தியானிக்கும் ஆனந்தத்தை விட சாப்பாடு கூட வேண்டியதில்லை

படைப்பு துவங்கும்போது உண்டாகட்டும் என இறைவன் பேசினார்

வெட்டவெளியில் இறைவனின் ஆவி ஒரிடத்தில் குவிந்தது . அதுவே பிரபஞ்சமாக விரிந்தது

அதையே ஆதிசக்தி என்கிறார்கள்

பிரபஞ்சம் உருவாகும் முன்பே ஆதிசக்தி இறைவனிடமிருந்து வந்தாள்

ஒன்று ஆக அரும்பி பலவாக விரிந்து அவைகளையும் நீங்கி தனியாகவும் நிற்பவள் நீ என்கிறான் பக்தன்

இந்த அறிவு தனக்கும் மூத்தவள் என்ற தெளிவு ஆலிலையில் துயின்ற சிவனுக்கும் நன்கு தெரியும் . எனக்கும் தெரிந்ததால்தான் என் இதயத்தில் மனம் கோணாது நீ வருகிறாய்

பொருள் கோட்டையல்ல என ஆரம்பித்து அருளே கோட்டை என்கிறான் பக்தன்

No comments:

Post a Comment

Abirami Anthathi 1 - 4

தார் தாரகா பூக்கும் கொன்றை மலர்களையும் சண்பக மலர்களால் ஆன மாலைகளையும் விரும்பி அணியும் தில்லை ஊரார் சிவனின் இடபாகத்தை கைப்பற்றிக்க...