நம்
மனத்தாமரையில் அன்னை வந்து நிரந்தரமாக குடியிருந்துவிட்டால் ஆன்ம
வாழ்விலும் சரி உலக வாழ்விலும் சரி ஒவ்வொன்றாக எல்லா மேன்மைகளும்
சித்திக்கும்
சிவனார் சிறந்த கலைஞன் கவிஞரும் கூட
முதல் தமிழ்சங்க புலவரான அவர் இன்று பரலோகத்தில் ருத்ர பதவியில் அதிதேவராக உள்ளார்
விண்ணிலுள்ள அந்த புலவனுக்கு விருந்து கொடுப்பவள் அதுவும் மருந்துகளையே விருந்தாகவும் தருகிராளாம் அன்னை
மின்னலைப்போன்ற மெல்லிய இடையை உடையவள் சிவனுக்கு மகிழ்வை கொடுத்து உத்வேகமாக இருக்கும் பொற்சிலை அவள்
அவளை நாளும் புகழும் வேதங்கள் காட்டிய வழியில் தொழுது வரும்
அடியவர்களைபின்பற்றும் சீடர்களுக்கு சகல மேன்மைகளும் உண்டாகி பரலோக
வாழ்வும் சித்திக்கும்
ஆன்ம சித்திகளே அழியாத சொத்து பதம்
அதில் ருஷி கண்டு அன்னையின் பாதத்தை பற்றி அவளின் வழியிலே வாழ சற்குருவாக வந்து அடிமை கொள்பவள் அவள்
உன்னதத்திலிருந்து வரும் சற்குநாதர்களை உணர்ந்து அடைந்த ஒரு சாதகனுக்கு மனித குருமார்கள் அவசியமில்லை
மனித குருமார்களிடம் குறை இல்லாமல் இருக்காது
அவர்கள் எங்களைப்போல உண்டுமா என பெருமை பேசி நம்மை மூடர்களாக மாற்றி ஆள் பிடிப்பதிலேயே இருப்பார்கள்
கடவுளுக்கு அடுத்த படியில் இருப்பவர்கள் நான்கு அதிதேவர்கள்
இதில் மற்ற மூன்று அதிதேவர்களும் முகிழ்நகையான அன்னையை போற்றுவார்களாம் இணக்கமாக நடந்துகொள்வார்களாம்
ஆகவே அன்னையின் தயவை பெற்றால் தானாகவே மற்ற மூன்று அதிதேவர்களின் தயவும் நமக்கு கிடைத்துவிடும்
இந்த தகுதி புவனேஸ்வரியான அன்னைக்கு தாய்மை என்ற சிறப்பால் உண்டானது
மேகங்கள் மலை முகடுகளில் கொஞ்சி வழிவதுபோனற அருள்பிரவாகம் அவளது தாய்மையின் இயல்பு . ஆகவேதான் இவளை மலைமகள் என்கிறோம்
வாழ்வின் அனுபவத்தால் ஞானம் கொடுத்து முற்றிய மூன்றாவது கண்ணை உடையவளான இவளால் வம்பான பிறவித்தொடரை நாம் கடந்துவிடலாம்
ஞானம் நிரம்பிய நிலையில் அதனை வாரிவழங்கிய சர்குருவான அன்னையின் மீது
நன்றி கடனாக கொப்பளித்து வரும் பரவசம் பித்தனைப்போல உலகிற்கு தெரியும்
விழியில் நீர்மல்கும் மெய்ப்புளகம் உண்டாகும் ஆனந்தம் அரும்பிததும்பும் சுவையால் அறிவு மயங்கி மொழி தடுமாறும்
இவையெல்லாம் அபிராமி பட்டருக்கு நேர்ந்துகொண்டு இருந்தது . அப்போதுதான்
ராஜா இன்று என்ன நாள் என கேட்டபோது அம்மாவாசையை பெளர்ணமி என சொன்னார்
அது உயிருக்கே உலையாகி போனது
ஆனால் பக்தன் சொல்கிறான் ; இந்த பித்தை தரும் அபிராமியின் வழிகள் நன்மையானவை என்கிறான்
ஏனென்றால்தன் பிள்ளைகளுக்காக எதையும் செய்பவள் தாய் என்பது அவன் அனுபவம்
எனக்கு என்ன நடந்தாலும் எனக்கு என்ன ?
நன்றே நடந்தாலும் என்ன
தீமையே நடந்தாலும் என்ன
நன்மை தீமை என்ற இருமையை கடந்துவிட்ட பக்குவத்தை
சகலமும் இறைவனாலும் அவரது தேவர்களாலும் நடக்கிறது
அதில் நான் ஒரு பார்வையாளன்
என்ற பக்குவத்தை நீதானே கொடுத்தாய்
உனக்கே பரம்
உனக்கே பரம்
சரணடைந்து விட்டேன்
சரணடைந்து விட்டேன்
விடுதலை பெற்ற முக்தனுக்கு மரணபயம் கிடையாது
அழியாத குணக்குன்றே
அருட்கடலே
இமவான் - உன்னதமான ஞானத்தில் வாழ்வோர்க்கு மகளும் ஆனவளே
கோமளமே
No comments:
Post a Comment