Total Pageviews

Saturday, 17 August 2019

Abirami Anthathi 62- 65



சுயம் என்ற அகம்பாவம் உடைய அசுரர்களின் முப்புரம் என்ற கோட்டையை
தகர்த்தவரும் ; மதத்தால் சிவந்த கண்ணோடு கொல்ல வந்த யானையின் தோலை உரிந்து
ஆடையாக அணிந்துகொண்டவருமான சிவனை தங்கச்சிலை போன்ற தனது மேனி அழகாலும்
மலர்களும் கரும்பும் அணிந்து சிந்தையில் புகுந்து பகுதி இடம் பிடித்தவள்
அல்லவா

அவளின் சிந்தை என்னையும் அடிமையாக்கட்டும்
நான் தேறும்படி அவள் நிச்சயமாக ஏதுகள் காட்டுவாள்
ஆத்மாக்கள் முன்னேரும்படியா க குன்றில் இட்ட விளக்காக ஆறு சமயங்கள் உலகில் வழிகாட்டுகின்றன
இன்று உலகில் எவ்வளவோ மதங்கள் மார்க்கங்கள் இருக்கலாம் . ஆனால் அவைகளின் அடிப்படைகளை ஆறு மார்க்கங்களுக்குள் வகைப்படுத்தி விடலாம்
இந்த ஆறு மார்க்கங்களில் மிகச்சிறந்தது தலையாயது சாக்தம் என்பது இந்த பக்தனின் முடிவு
சக்தி வழிபாடு தனியாக இருந்தாலும் மற்ற எல்லா மார்க்கங்களிலும் அன்னை ஏதாவது ஒரு இடத்தில் இருப்பாள்
சிவனுக்கு மனைவியாக நாராயணனுக்கு தங்கையாக கிராம தெய்வங்களில் சப்த கண்ணியராக அவள் இல்லாத இடம் இல்லை
ஆகவே இந்த பக்தன் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு இவளை மட்டும் கும்பிட்டா பத்தாதா மற்ற தெய்வத்தை வீணர்கள் கும்பிடுகிறார்கள் என்கிறார்
பொதுவாக இலக்கியத்தில் உயர்த்தி பேசும் இடத்தில் இப்படித்தான் வரும் இதைத்தவிர எதையும் கும்பிட மாட்டேன் வீண் என்று

ஆனால் உடனே மனிதர்கள் எங்கள் தெய்வம் மட்டும்தான் தெய்வம் மற்றதெல்லாம்
கும்பிடக்கூடாது என அடுத்த மத தேவர்களை இகழ்கிறவர்களாக மாறிக்கொள்கிறார்கள்

மதமாச்சரியம் என்பது ஒரு அசுர குணம்
உன் தெய்வத்தை நீ அறிந்திருக்கிறாய் என்பதற்காக அடுத்த தேவர்களை காறித்துப்ப கூடாது
ஆனால் அடுத்த அடியில் ஒரு உண்மையை கூறுகிறார்
வீணே பலிகவர் தெய்வங்கள்பால் சென்று மிக்க அன்பு பூனேன்
இந்து தர்மத்தில் ஆரம்பத்தில் காய் கனிகளை யாகத்தில் சமர்பிக்கும் வழக்கமே இருந்தது
ஒரே ஒரு எலுமிச்சை கனியை சமர்பித்தால் ஆயிரம் ஆடுகளை பலியிட்டதற்கு சமம் என தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது

ஆனால் மனிதர்கள் தங்கள் சொந்த பந்தங்களை சும்மா அழைத்தால் வரமாட்டார்கள்
என்பதற்காக கோழி ஆடுகளை பலியிட்டு தாங்கள் விருந்துகொண்டாடுவதை
தெய்வத்திற்கு பலியிடுவதாக சொல்லிக்கொள்ள ஆரம்பித்தார்கள்

தங்கள் சுய அனுபவத்திற்காக பலியிடுதல் வீணானது
உன்னை புகழ்கின்ற சரணகதிகளுக்கு நிகரானவை உண்டோ
பூமியிலும் பாதாளத்திலும் விண்ணுலகிலும் சொர்க்கத்திலும் உன் திருமேனி பிரகாசத்தை விட மனம் கவருகிற எதுவுமில்லையே

ஈரேழு பதினாலு லோகத்திலும் உள்ளோர் விதிர்த்து நிற்கும்படியாக காம அம்பை
எய்த வந்தவனை சுட்டெரித்தவரான தவயோகியின் பாதி உடலை கைப்பற்றியவள் நீயல்லவா

மனிதர்கள் அனைவரிடத்தும் ஆறு நல்ல குணங்கள் ஆறு தீய குணங்கள் என 3 X 4 = 12 முகங்கள் அவ்வப்போது ஒன்று என வெளிக்காட்டும்
ஆனால் ஆறு நல்ல குணங்கள் மட்டும் உடைய மகனாக முருகனை மாற்றியது உன் வல்லபம் அல்லவா
தாயைப்போல பிள்ளை என்பார்கள்
முருகன் செம்மான் என்றால் தாய் நீயல்லவோ செம்மையான்வள் என்கிறான் பக்தன்

No comments:

Post a Comment

Abirami Anthathi 1 - 4

தார் தாரகா பூக்கும் கொன்றை மலர்களையும் சண்பக மலர்களால் ஆன மாலைகளையும் விரும்பி அணியும் தில்லை ஊரார் சிவனின் இடபாகத்தை கைப்பற்றிக்க...