Total Pageviews

Saturday, 17 August 2019

Abirami Anthathi 58 -61



அன்னை வழிபாட்டில் பக்தன் குழந்தையாகிவிடுகிறான்
அவன் வர்ணிக்கையில் அங்கு ஆபாசம் வருவதில்லை
பிள்ளைக்கு செழுமையாக போதும் போதுமென்கிற அளவு தாய் பாலூட்டும் தருணம் பார்த்துக்கொண்டே இருப்பாளாம்
தருணாம்புயமுலை தையல் நல்லாள்
கொச்சைக்கண்ணர்களுக்கு மட்டுமே விரசமாகத்தெரியும்
நயன விழி என்பது கணவு கண்டு வாந்தியெடுக்கும் காதல்பித்து கவிஞர்களின் வார்த்தை
ஆனால் பக்தனுக்கோ கவ்ரவமான தகைசேர் நயனம் அதில் பிரவகித்து வருவதோ கருணை
இனக்கவர்ச்சி நெஞ்சத்தில் இருக்கும்வரை பெண்ணின் முகத்தை வஞ்சமில்லாமல் பார்க்க முடியாது

தப்பாக எடுத்துகொள்வார்களோ என பார்க்காதபோது பார்ப்பதும் பார்வை வருகிறதோ
ஏனும்போது மாற்றி பார்ப்பதுமாக கண்ணாமூச்சி விளையாட வேண்டியிருக்கிறது

ஆனால் அன்னையோ இளநகை பூத்தவளாக கருணையோடு பார்க்கிறாள்
ஆகவே அவள் வதணத்தை லயித்து பார்க்க முடிகிறது
அந்த மூக்குத்தி
மதுரைக்காரர்கள் வைரமூக்குத்தி வைரமூக்குத்தி என பெருமையாக பேசிக்கொள்வார்கள்
ஒரு தொங்கல் வேறு
காதிலே பப்படம்
இவ்வளவு வெயிட் போட்டால் காது தாங்குமா
காலையிலே பூஜையறையில் இந்த சந்தேகம் வந்து உற்றுப்பார்த்தால் அது கிரீடரத்திலிருந்தே வருகிறது
வதணாம்புயம்
தராம்புயம்
கேளுங்கள் கிடைக்கும்
சரணாம்புயம்
என் பாதத்தை சரணடைந்துவிடு
ஆறுதல் உண்டு தேற்றப்படுவாய்
இவ்வளவையும் ரசிக்கும்போது அவள் சிந்தனையில் இருக்கிறாள்
சித்தாம்புயத்தில் வீற்றிருக்கிறாள்
என் இளவயதில் குருநாதர் ஒருவர் பாக்காத பாக்காத பாக்க பாக்க கவர்ச்சியாக இருக்கும்
ஆனா ஒவ்வொரு பொம்பளயும் பிறவிபிறவியா வாங்கி வச்சுருக்கிற தோசமெல்லாம் உனக்குள்ள ஏறிரும் ஏன்பார்
பட்டினத்தார் பாட்டு கூட சளி மூக்கு கப்பு வாய் ஒய்யாரக்கொண்டை ஈரு பேணி ஏன்றெல்லாம் வாசிக்க சொல்லுவார்
அந்த தோஷத்தை அம்மாவின் அழகை ரசித்து ரசித்து போக்கிக்கொள்ள முடியும்
திரிபுரசுந்தரி யல்லவா
அழகை மெருகூட்டி யாரை மயக்கினாள்
அப்பன் சிவனையல்லவா
சிவன் சிறிதுகாலம் சடையாண்டியாக பித்துபிடித்து அலைந்தார்
தன்குறை தீர எங்கோன் தலைமேல் வைத்த தாமரையே என பாடல் உண்டு
கங்கையும் அன்னையே
அருணை என்பது சிவனின் ஜடாமுடி

அருணாம்புயத்தில் அமர்ந்துள்ள அன்னையை என் சித்தாம்புயத்தில் அமர்த்தினால்
பெண்களை உத்து உத்து பார்த்ததால் வந்தேறிய தோசங்களை போக்கிக்கொள்ள
முடியும்

ஆண்களே ஒரு நாளைக்கு பத்து பத்து பெண்களை உத்து உத்து
பார்தாலே போதும் பல குடும்பத்து பாராம்பரிய தோசங்கள் உங்கள் ஆத்மாவில் ஏறி
பத்து பத்து பிறவி பின்னோக்கி போய்விடுவீர்கள்

பிறகு ஏப்படி தவம் செய்து கிழிப்பீர்கள்
இதற்கு தீர்வுதான் என்ன

முள்ளை முள்ளால் எடுப்பதுபோல பத்து பத்து நிமிடம் அன்னையின் திவ்ய
முகத்தையும் உருவத்தையும் அலங்காரத்தையும் உள்வாங்கினால் அந்த தோசம்
கழிந்து அருள் ஆத்மாவில் நிறையும்

அப்படியே பெண்களால் பாதிக்கப்படாத அளவு ஆத்மசுத்தி உண்டாக உதவிசெய்யும்
இந்த தஞ்சம் தவிர்த்த தவநெறிகளால் ஆண்பெண் பேதத்தை கடறுவது முக்தி எளிதல்ல
அதிதேவர்கள் நால்வர் மிகமுக்கியமானவர்கள்
அருவமான பரம்பொருள் இறைவனின் அடுத்த நேரடியான வெளிப்பாடனவர்கள்
இந்த நால்வரில் அன்னையை அண்ணனான திருமால் தவிர அனைவரும் வணங்குவார்களாம்
மாலினும் தேவர் வணங்க நின்றவள்
சிவனுக்கு அவள் மனைவி ஆனாலும் சிவனுக்கும் அவள் மூத்தவள்
கறைகண்டனுக்கு மூத்தவளே என்றும்
மூவா முகுந்தர்க்கு இளையவளே

என்ற பாடல் வரிகள் உண்டு
கொன்றை வார் சடையில் உச்சியில் பிறையாக அவளே இருக்கிறாள்
சடையில் கங்கையாகவும் அவளே இருக்கிறாள்
கழுத்தில் நாகதேவியாகவும் அவளே இருக்கிறாள்
அட உடலிலே பாதி உடலாகவும் அவளே இருக்கிறாள்
விழுந்து விழுந்து காதலிப்பவள் ; உடல் முழுதும் ஆட்சி செய்பவள்
காமாட்சி
உன்னை உள்ளவண்ணம் அறியும் அறிவை தருவாயா

No comments:

Post a Comment

Abirami Anthathi 1 - 4

தார் தாரகா பூக்கும் கொன்றை மலர்களையும் சண்பக மலர்களால் ஆன மாலைகளையும் விரும்பி அணியும் தில்லை ஊரார் சிவனின் இடபாகத்தை கைப்பற்றிக்க...