Total Pageviews

Saturday, 17 August 2019

Abirami Anthathi 66 -69



வலிமைகள் நிறைந்தவன் அல்ல நான்
வரங்கள் அருளப்பட்டவனுமில்லை
ஆனால் உன்னை வழிபட்டதால் கிடைக்கும் பலன்களை சொத்தாக வைத்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

பாசுபதாஸ்திரம் உடைய வில்லாளியுடன் வீற்றிருப்பவளே நான் உன்னைப்பற்றி
பேசுகிற வார்த்தைகள் அறியாமையால் உனக்கே விரோதமாக போனால் கூட நின் திருநாம
ஜெபம் செய்வதால் என்னை காத்துவிடுவாயல்லவா

உன் நாமங்களை தோத்திரம் செய்து தொழுது மின்னலைப்போன்ற நின் தோற்றத்தை ஒரு நொடிப்பொழுது தியானத்தில் போதுமே
அவ்வாறு செய்யதவர்களோ வலிமை, குலம்,
கோத்திரம், கல்வி, குணம், குன்றி, நாளும் மெலிந்து வீடுகள் தோறும் பிச்சை கேட்கிற பலிக்கும் ஆளாகிரார்களே


பஞ்ச பூதங்களும் ஆறு அறிவுகளும் ஒன்றாக பொதிந்துள்ள சிவகாம சுந்தரியின்
பாதங்களை சரணடைந்த தவம் உடையோரை சகல செல்வங்களும் தானாக தேடி வரும் அல்லவோ

தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும், தெய்வ வடிவும் தரும்,; இதுவெல்லாம் வந்தாலும் வஞ்சகம் இல்லாத நண்பர்களை உறவினர்களை சுற்றத்தினரை அடைவது அவ்வளவு எளிதா

சகலரையும் ஏதோ ஒருவகையில் சாந்தம் சமாதனப்படுத்தும் மோகனம் யாரிடம் உள்ளது
யாரலும் அடக்க முடியாத அசுரர்களை மோஹினியாக அன்னை வந்து தன் இயல்பால் விக்கித்து நிற்க வைத்தாவள் அல்லவா
அந்த தருணம் பார்த்து அல்லவோ சிவனும் அவர்களை போட்டுத்தள்ளினார்

வில்லவருடன் வீற்று இருப்பவள் அல்லவோ என பக்தன் பாடும்போது அவளுக்கு
பாதுகாப்பாக சிவன் இருக்கிறார் என்பதுபோல வாசகம் வந்தாலும் அந்த வில்லாலும்
பயனற்ற நிலை வந்தபோது அன்னையல்லவோ தந்திரம் செய்து வில்லுக்கே வெற்றி
தேடித்தந்தவள்

வெற்றிக்கே வெற்றி கொடுத்தவள் என பாராட்டி மகிழ்கிறான் பக்தன்

No comments:

Post a Comment

Abirami Anthathi 1 - 4

தார் தாரகா பூக்கும் கொன்றை மலர்களையும் சண்பக மலர்களால் ஆன மாலைகளையும் விரும்பி அணியும் தில்லை ஊரார் சிவனின் இடபாகத்தை கைப்பற்றிக்க...