Total Pageviews

Saturday, 17 August 2019

Abirami Anthathi 86-89



கர்மத்தொடர் இரண்டு நம்மை ஆளுமை செய்யும்
பிதுரார்தித கர்மம்
சஞ்சித கர்மம்
நம் முற்பிறவியில் நாம் சேர்த்துவைத்துள்ள கர்மம் பிதுரார்ஜிதம்
அதற்கு ஒத்த குடும்பத்தில் நாம் வந்து பிறக்கிறோம்
இப்போதோ நம் கர்மம் மட்டுமல்ல இந்த குடுமபத்தின் முன்னோர்களின் பாவங்களும் சேர்ந்து நம் ஆத்மாவில் ஏறிக்கொள்கிறது
அது நம்மை வழிநடத்தும்

அதன் வழியிலும் அதோடு மல்லுக்கு நின்றுகொண்டும் இப்பிறவியில் புதிதாக நாம்
சேர்க்கும் பாவ புண்ணியங்களும் சேர்ந்து இப்பிறவியில் நாம் மரணத்தை
தழுவும்படியாக கண்டங்கள் பல உண்டாவதுண்டு

அந்தக்கண்டமே வெங்காலன் வேல் விடும் நேரமாகும்
அந்த வேல் என்பது அந்த ரெண்டு கர்மத்தால் உண்டானது
கவிதைக்கு அழகு என்பது இவ்வளவு வார்த்தைகளால் சொல்ல வேண்டிய அர்த்தத்தை ரெண்டே வார்த்தையில் அடக்கி விடுவது
கப்பு - பழையது
கதிப்பது - இப்போது செய்வது
இப்போ பக்தன் என்ன சொல்கிறான் ; தன் அதிதேவர் அன்னை எப்படிப்பட்டவள் என்கிறான்

திருமாலும் பிரம்மாவும் ஆதிசேஷனும் அடி முடி தேடியும் காணமுடியாதவரான
அதிதேவர் சிவனின் சூலம் ஏந்திய கையும் அந்த பக்கத்து காலும் யாருடையதாம்

அவளுடையதாம்
அதனால் வெங்காலனை பார்த்து ஏய் நில்லு நில்லு என்பாளாம் அன்னை
அந்த வார்த்தை அழிவின் அதிபதியான சிவனாரின் பாதியாளின் வார்த்தையல்லவா
காலன் கேட்டுத்தானே ஆகவேண்டும்
அன்னைக்கு ஏதாவது ஒரு வகையில் ஒவ்வொருவரோடு உறவு இருக்கும்
காளியின் தங்கையான திரெளபதி எமனின் மகனான தர்ம ராஜரின் மனைவியல்லவா
பிறகு அந்தக்குரலுக்கு மரியாதை இல்லாமலா இருக்கும்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழி என்கிறான் பக்தன்
வார்த்தையாலும் உணர்வாலும் புரிந்துகொள்ள முடியாதவளே
என் பாதைக்கும் அதனால் உண்டாகும் கர்மாவுக்கும் நீ காவலாக இருக்கிறாய்
கலியுக வாழ்வில் நான் பல தவறுகள் செய்கிரவனாகவே இருக்கிறேன்
மன்மதனை விழியாலேயே சுட்டெரித்து அழிவற்றவர் என நிரூபித்த சிவனாரின் பாதி உடம்பை கைப்பற்றி கலியுகத்தை காத்துக்கொள்கிறவள் நீயல்லவா
என் குறைகளை காப்பாய்
அக்கிரமம் மிகுந்த அசுரர்களின் முப்புரத்தை எரிக்க சிவனார் வில்லை எடுத்தபோதும் அவரின் உக்கிரத்தை குறைத்தவள் அல்லவா
பிரம்மாவும் சிவனாரின் தண்டனைக்கு ஆளான போது ஒரே ஒரு சிரத்தை கொய்ததொடு தடுத்து நிறுத்தியவளும் நீயல்லவா
பரம் என்று உன்னை சரணடைந்து விட்டேன்
என்னை தரம் அற்றவன் என்று தள்ளிவிடாதே
நான் பலமுறை சொல்லிக்கொண்டுள்ளேன்

பக்தி என்றவுடன் ஒண்ணாங்கிளாஸ் ஹீ ஹீ என்று ஒதுக்குகிற ஞானமார்க்க
சிறுபிள்ளைகளுக்கு நான் சொல்வது அந்த ஞானத்தில் போதிய அளவு வளராததால்தான்
இப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு வருகிறது

ஒரு குறிப்பிட்ட அளவு
வளர்ந்தீர்களானால் எவ்வளவு அறிவும் ஞானமும் ஒன்றுக்கும் ஆகாது ; அதுவும்
அஹம்பாவம் என்னும் மாயை ; இறைவனையும் அவரது தேவ மனடலத்தாரையும்
சரணடைந்தாலன்றி இனி முன்னேற்றமே இல்லை என்கிற தாழ்மைக்கு வந்தடைவீர்கள்

ஞானம் முற்றியபிறகு வரும் பக்தி பக்தியோகம் ஆகும்
அவன் ஏற்கனவே நீங்க சொல்கிற குண்டலினியை ஏத்துறது இறக்கிறது எல்லாம் அத்துப்படியாணவனே
இந்த பக்தன் யோகஅப்பியாசத்தில் கைதேர்ந்தவன் என்பது வரும் வார்த்தைகளில் விளங்கும்
உடம்பை விட்டு உயிர் வெளியேறிய பிறகு ஆத்மாவுக்கு உணர்வு இருக்கும் ; ஆனால் செயல்படக்கூடிய அறிவு இருக்காது
சும்மா ஒரு பார்வையளனைப்போல உணரும் அவ்வளவே
அறிவு செயல் அற்ற மரணம் நிகழும்போது என்ன நடக்குமாம்
துரியம் அற்ற உறக்கம் வந்து விடுமாம்
அப்படியானால் துரியம் உள்ள உறக்கம் என ஒன்று இருக்கவேண்டுமல்லவா ?
இருக்கிறது இருக்கிறது
ஜீவசமாதி ஜீவசமாதி என கத்துக்குட்டிகள் தேடி அலைகிறார்களே அதுதான்
துரியம் என்கிற இடத்தில் ஒரு பெட்டகம் போல முக்கோணம் போல உள்ளது
அதற்குள்ளாக உயிரை செலுத்தி பூட்டி விட்டால் உயிர் அந்த பெட்டகத்தை விட்டு வெளியேறாது
அதுதான் துரியம் உள்ள உறக்கம்
உடலை விட்டு உயிர் பிரியாது
அந்த உடல் செயல்பாடுகளை நிறுத்திவிடும்
ஆனால் அழுகாது
தரையில் கிடந்தாலும் அப்படியே இருக்கும்
கைகால் உறையாது துவளும்
தண்ணீர் வாயில் விட்டால் உள் இறங்கும்
இவையெல்லாம் இன்றும் மேய்வழிச்சாலையில் ஜீவ ஒடுக்கம் அடைகிரவர்களை போய் பாருங்கள் சாட்சியாக அரங்கேறிக்கொண்டுள்ளது
ஆனால் இவையெல்லாம் சுய பயிற்சியினால் சித்தர்கள் பலர் அடைந்தார்கள்
பக்தி யோகிக்கு அவரவர் அதிதேவர்கள் வந்து சேவடியை சென்னியில் வைக்கிற திருவடி தீட்சை வழங்க வேண்டும்
வள்ளலார் சிவனால் திருவடி தீட்சை அனுபவம் பெற்ற பிறகே அருட்பெருஞ்சோதி என அருவ இறைவழிபாட்டுக்கு மாறினார்
பூமியில் பல ஞானிகள் ஜீவசமாதி இருந்தபிறகும் ; அந்த பலமும் நீங்கி மறுபடி பிறக்கிறார்கள்
ஜீவசமாதி நிரந்தரமானதல்ல
அது தற்காலிக நிம்மதி
பிறவி எடுக்காமல் சிலகாலம் தவிர்க்கலாம்
கலியுக முடிவு வரை மீண்டும் மீண்டும் பிறந்து அல்லல் படாமல் தவிர்த்துவிட்டால் சத்திய யுகத்தில் உயிர்த்தெழ வைக்கப்படுவோம்
அவ்வாறு உயிர்த்தெழ செய்வதற்கென்றே ஒருவர் வர உள்ளார்
வள்ளலார் சத்திய ஞான சபையில் எழுவார் மேடை ஒன்றை கட்டிவைத்துள்ளார்
கிறிஸ்தவம் இசுலாம் எல்லாவற்றிலும் வரப்போகிறவரைப்பற்றி முன் அறிவிப்புகள் உள்ளன
அவரே என்னால் முன்னறிவிக்கப்படுகிற சமரச வேதாந்தி
அல்மஹதி
அவர் அதிதேவர் நாராயணியின் அருள் குமாரனுமாவார்
திரெளபதியின் மனம் கவர்ந்த கணவனும் ஆவார்

No comments:

Post a Comment

Abirami Anthathi 1 - 4

தார் தாரகா பூக்கும் கொன்றை மலர்களையும் சண்பக மலர்களால் ஆன மாலைகளையும் விரும்பி அணியும் தில்லை ஊரார் சிவனின் இடபாகத்தை கைப்பற்றிக்க...