Total Pageviews

Saturday, 17 August 2019

Abirami Anthathi 74 -77



அன்னையின் அடியினை யாரெல்லாம் கவணித்துக்கொண்டே இருப்பார்களாம் ?
நயனங்கள் மூன்று உள்ள சிவன் ; நாராயணன் ; பிரம்மா
மேலும் யார் இந்த வேதம்
யோக அப்பியாசம் தவம் தியானம் விசாரம் ஞானம் ; இவைகள் அனைத்திற்கும் சற்குருவாக ஒருவர் உள்ளார்
அவர் அதிதேவர் ஆதிசேஷன்
விசாரம் எனற ஒன்று ஆதிசேஷன் கிருபையில்லாமல் நடக்காது
சேஷம் கொடுப்பது என பிறந்த குழந்தைக்கு குடும்ப பெரியவர்கள் முதல்முதலாக கொடுப்பார்கள்
அந்த குழந்தைக்கு சேஷம் கொடுத்தவர்களால் குடும்ப பாராம்பரிய உணர்வுகள் தூண்டிவிடப்படும்
சேஷம் என்றால் தூண்டி விடுதல்
வெட்டவெளியில் ஆதியில் இயக்கத்தை தூண்டி விட்டவர் சாட்சாத் ஆதிசேஷனாவார்
அவர் நாராயணனில் ஒரு அங்கம் என்றாலும் தனித்தும் செயல்படுவார்
யார் சித்தி முழுமை தேவத்துவம் அடைந்தார்களோ அவர்கள் அனைவரும் ஆதிசேஷனின் அங்கீகாரத்தை பெறுவார்கள்
சூசகமாக தலையில் ஆதிசேஷனை போட்டிருப்பார்கள்
ஆதிசேசனுக்கு இரண்டு அம்சம் உண்டு
கார்க்கோடன் - விநாயகர் - துவக்குபவர்

செங்கோடன் - முருகன் - ஞான சற்குரு - நிறைவை அருளுபவர் - உள்ளும்
புறம்பும் தீய இயல்புகள் அசுரர்களுடன் யுத்தத்தை நடத்தி நமக்கு ஞானம்
அருளுபவர்

நாம் எந்த குருகுலத்தில் இருந்தாலும் முருகனது அருளைப்பெற வேண்டும்
ஆனால் இந்த நால்வரும் அன்னையின் பாதங்கள் எப்பக்கமாக செல்லுகிறது என கண்காணித்துக்கொண்டே இருப்பார்களாம் என்கிறான் பக்தன்
அந்த அடியோடு இணைந்துள்ள சிந்தனை நமக்கும் வந்தால் சகலதேவர்களின் அருளும் ஆசியும் அறிமுகமும் கிடைத்துவிடும்
அதுவே ராஜயோகம் சித்திப்பதன் திறவுகோல்
ராஜயோகம் கொஞ்சம் வாடை அடித்தாலே போதும் கார்ப்பரேட் சாமியார்களாக வலம்வரத்தொடங்கி விடுவார்கள்
அங்கே பொன்னும் பெண்ணும் குவிந்து பலர் வழுக்கி விடுவதும் உண்டு
அன்னையின் மீதான பக்தி சரணாகதம் இருந்தால் வழுக்காமல் தப்பலாம்
பொன்னும் பெண்ணும் பாதிக்காத நிலையை அடைந்த யோகிகள் மீது இவைகள் நெருக்கமாவதை தவிர்க்கவும் இயலாது
கற்பக விருட்சம் ; காமதேனு பசு அன்னையால் தன் பிள்ளைகளுக்கென்று உருவாக்கப்பட்டது
பரமாத்மாவான மாலை அடையும் வரை உன்னை பிடித்து கீழே இழுப்பார் இல்லாமல் வலுவான பிறவித்தொடரை கடந்து செல்லலாம்
மால்வரையுமான ஈரேழு பதினாலு லோகங்களையும் படைத்தபோது இவள் அதில் பங்கு பெற்றிருந்தாள்
ஆகவே இவளது திருமேனியில் லயித்தவர்களால் பரமாத்மாவை எட்டமுடியும்

வண்டு கிண்டி அவிழும் கொன்றை மலர்களை அணிந்துள்ள ஜடா முடியில் கங்கையை
அணிந்துள்ளவரான சிவனாரின் பகுதி உடம்பை பறித்து அதில் குடிபுகுந்துள்ள உன்
திறத்தை கண்டு வியந்துநிற்கிறேன்

No comments:

Post a Comment

Abirami Anthathi 1 - 4

தார் தாரகா பூக்கும் கொன்றை மலர்களையும் சண்பக மலர்களால் ஆன மாலைகளையும் விரும்பி அணியும் தில்லை ஊரார் சிவனின் இடபாகத்தை கைப்பற்றிக்க...